Wednesday, December 27, 2017

*விடுதலைப் புலிகள்1983ல் வாஜ்பாயையும், அத்வானியையும் சந்திக்க உதவிய ஜனா. கிருஷ்ணமூர்த்தியும், கே. நாராயணராவும்.*


-------------------------------------
தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் முதல் தலைவராக 1980-85 தலைவராக இருந்தவர் கே. நாராயணராவ். விடுதலைப் புலிகள் தங்களின் நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சிக்கு விளக்க வேண்டியிருந்ததால் வாஜ்பாயையும், அத்வானியையும் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது ஜனா.கிருஷ்ணமூர்த்தியும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவராக பொறுப்பிலிருந்த இருந்த கே. நாராயணராவும் உதவினார்கள். 
திரு. கே. நாராயணராவ் இன்று (27/12/2017) காலமானார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல். 

ஜனா. கிருஷ்ணமூர்த்தியும் அந்த காலக்கட்டத்தில் என்னோடு மிகவும் அன்பாக இருப்பார். கச்சத்தீவு, இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்த போது அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர். நான் கச்சத்தீவு நூல் எழுதுவதற்கு எனக்கு பல தரவுகளையும் வழங்கியவர். ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் சகாவான கே.நாராயணராவ் தாம்பரம் பகுதியில் வசித்து வந்தார். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

#ஜனா_கிருஷ்ணமூர்த்தி
#கே_நாராயணராவ்
#தமிழ்நாடு_பாரதிய_ஜனதா
#கச்சத்தீவு
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-12-2017

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...