Thursday, December 28, 2017

கிழக்குக் கடற்கரை இரயில் பாதை கைவிடப்பட்டது.


சென்னை – பெருங்குடி – மாமல்லபுரம் – புதுச்சேரி – கடலூர் 178 கிலோ மீட்டருக்கான இரயில் பாதை 2008-2009 இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆய்வும் முடிந்தது. மறு ஆய்வுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. கடலூரிலிருந்து திருவாரூர் தற்போது பயண்பாட்டில் உள்ள அகல இரயில் பாதையை இதனுடன் இணைத்துக் கொள்ளவும், பின் திருவாரூர் – காரைக்குடி – இராமநாதபுரம் – கீழக்கரை -  தூத்துக்குடி – ஆறுமுகநேரி – திருச்செந்தூர் – கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி வரை 248 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரயில் பாதை அமைக்க 2009 இல் ஆய்வும் செய்யப்பட்டது. இதற்கு மொத்த மதிப்பீடு செலவு ரூ. 1080 கோடி என்று மத்திய அரசுக்கு அறிக்கையும் வழங்கப்பட்டது. 
பத்தாண்டுகள் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத் திட்டங்கள் ஏனோ டெல்லியில் கிடப்பில் போடுவது வாடிக்கையாகிவிட்டது.
ஏற்கனவே கிழக்கு கடற்கரைச் சாலைப் பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றது.


#கிழக்கு_கடற்கரை_இரயில்_பாதை
#தமிழ்நாடு_உரிமைகள்
#TN_Rights
#KSRadhakrishnanPostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*

27-12-2017

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...