Monday, December 11, 2017

பாரதி

அச்ச மில்லை அமுங்குத லில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுது மஞ்சோம்

வானமுண்டு மாரியுண்டு ஞாயிறுங் காற்றும்
நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும்
மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே
தின்னப் பொருளும் சேர்ந்திட பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் லுலகமும்
என்றும்இங்குளவாம் சலித்திடாய் ஏழை!
நெஞ்சே வாழி ! நேர்மையுடன் வாழி வஞ்சக
கவலைக்கு இடங்கொடேல் மன்னோ

.

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11-12-2017

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...