Sunday, March 19, 2023

#எனது சுவடு-14 -நான் முழுக்கவே தோற்றுவிட்டேன் என்று ஒத்துக்கொண்ட பிறகும் நான் ஏன் திரும்பத் திரும்பத் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று புரியவில்லை .KSR

#எனது சுவடு-14
—————————————
நான் முழுக்கவே
தோற்றுவிட்டேன் 
என்று ஒத்துக்கொண்ட பிறகும்
நான் ஏன் திரும்பத் திரும்பத்
தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்
என்று புரியவில்லை .

நான் துயருற
அவமானப்பட
இனி எதுவும் இல்லை
என்று நினைத்துக்கொள்வதும்
ஒருவித அகங்காரமா?
துக்க அகங்காரம்.

'ஒரு மனிதனிடமிருந்து
பறித்துக்கொள்ளப் பட 
எவ்வளவோ இருக்கிறது.
ஒரு பிச்சைக்காரனிடமிருந்து கூட.

ஒருவன் இறந்தபிறகும் கூட
அவனிடமிருந்து
எவ்வளவோ பறித்துக்கொள்ளப்படலாம்.
அவனது நற்பெயர்.
அவனது புகழ்.
அவனது சாதனைகள்.

இப்போதுள்ள மனநிலையில் உண்மையை சொல்லவேண்டுமாக இருந்தால் வாழ்க்கையை பிடிக்கிறதுக்கான பெரிய காரணமோ, உந்துதலோ எதுவும் இல்லை. அதே மனிதர்கள், அதே வாழ்க்கை, மாற்றமடையாத கட்டமைப்புகள் மிகுந்த அலுப்பை தருகிறது. தொழில், பணம், அதற்குள் போட்டி, பொறாமை, புகழ், அதிகாரம், நன்றியற்ற துரோகம் இதற்கான போட்டியுடன் இப்படிப்பட்ட மனிதர்களை மட்டுமே தொடர்ச்சியாக சந்தித்து சோர்வாக இருக்கிறது.

நான் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக, நானாகவே இருக்கிறேன் என்பதை கவனித்த போது உணர்கிறேன், பயணமும், எழுத்தும் மட்டுமே உயிர்ப்போடு வைத்திருக்கிறது. பயணத்தின் வழி கண்டடைந்த மனிதர்களும், கதைகளும்தான் இந்த வாழ்வு நகர்வதற்கான காரணமாக இருக்கிறது. பயண இலக்கியங்களை நேசிப்பதற்கும், அவை தொடர்பில் தொடர்ந்து இயங்குவதற்கும் இந்த மனப்பாங்கே காரணமாக இருக்கிறது.

https://youtu.be/jmYSwrVoYNc

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

ஆசிரியர் கதை சொல்லி, 
பொதிகை-பொருநை-கரிசல்.
19-3-2023.

No comments:

Post a Comment

*கனவாகிப் போன கச்சத்தீவு*- எனது நூல்-KSR

*கனவாகிப் போன கச்சத்தீவு*-  எனது நூல் •••• எனது "கனவாகிப் போன கச்சத் தீவு" எனும் எனது நூல் விரிவான நான்காவது பதிப்பாக  வெளிவருகிறத...