Friday, March 31, 2023

#ஈழத்து தந்தை எஸ். ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 125ஆவது பிறந்த தினம் !



—————————————
மலேசியாவில்பிறந்து யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வடக்கு கிழக்கிற்கு தமிழ்த்தேசிய முகவரி கொடுத்தவர் தந்தை செல்வா









தந்தை செல்வாவின் 125 வது பிறந்தநாள் இன்றாகும் (மார்ச் 31) அவரின் பிறப்பு பதிவுப்பெயர் செல்வநாயகம் அவர் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார்.                                    










செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார்.

செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் முக்கியமான ஒருவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதமராக செயல்பட்ட சாலமன் பண்டாரநாயக்கா ஆவார்.            

செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.
பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர்.                                   

உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் 1944, ஆகஷ்ட்,29,ல் இணைந்து அரசியலில் பணியாற்றினார்.இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் 1949, டிசம்பர்18,ல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். 

தமிழ்தேசிய அரசியலின் தாய்க்கட்சி இலங்கைத்தமிழரசுக்கட்சி என்பதை செயல்கள் மூலம் நிருப்பித்த தந்தை்செல்வா அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தாயகமாக செயல்படவேண்டும் என்ற எண்ணத்தை தனது மனதில் நிறுத்தி சமஷ்டி அடிப்படையிலான சுய ஆட்சி ஒன்றே இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்திற்கு உகந்தது என்பதை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் அடிப்படைக்கொள்கையாக ஏற்று செயல்பட்டார்.

தமது அரசியல் செயல்பாட்டை வடக்கு மாகாணத்துடன் மட்டும் மட்டுப்படுத்தாமல் கிழக்கு மாகாணத்தில் தமிழ்தேசிய அரசியலை விஷ்தரிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேரடியாக 1956, ம் ஆண்டு சென்று மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் செல்லையா இராசதுரை என்பவரையும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களையும் இனம்கண்டு இலங்கைத் தமிழ் அரசியல் கட்சியில் உள்வாங்கினார்.

இதன்மூலம் 1956, தொடக்கம் கிழக்குமகாணத்தில் தமிழ்தேசிய அரசியல் கூர்மை பெற்று தமிழ் தலைவர்கள் மட்டுமன்றி இஷ்லாமிய அரசியல் தலைவர்களையும் கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழ் அரசிக்கட்சியில் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற சொல்லாடல் மூலம் தமிழ் முஷ்லிம் ஒற்றுமையை கட்டிவளர்த்தார்.

தந்தை செல்வா 1956, ல் மட்டக்களப்புக்கு வருகை தந்து தமிழ்தேசிய அரசியலுக்கு அத்திவாரம் இடாமல் இருந்தால் இன்று கிழக்கு மாகாணம் பேரினவாதிகளுடைய சிங்கள கட்சிகளிடம் சோரம்போய் தமிழை மறந்து மண்ணை மறந்து தமிழ்  இன மான உணர்வை இழந்தவர்களாக கிழக்கு மகாண மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அனைவரும் தந்தை செல்வாவின் 135, வது பிறந்த நாளில் புரிவது காலத்தின் கட்டாயம்.

தந்தைசெல்வா 1898 மார்ச் 31 ல் பிறந்து 1977,ஏப்ரல்,26,ல் மரணித்தாலும் அவர் விட்டுச்சென்ற தமிழ்தேசிய அரசியலை முன்னகர்த்துவதே அவருக்கு நாம் செலுத்தும் பிறந்தநாள் நினைவாகவும் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகவும் அமையும்.

ஈழத்து வரலாறும் தொல்லியலும்.

#ksrpost
31-3-2023

No comments:

Post a Comment

BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs