Tuesday, November 14, 2017

தமிழக அரசுக்கு மக்கள் மீது இவ்வளவு அக்கறையா?

அட! தமிழக அரசுக்கு மக்கள் மீது இவ்வளவு அக்கறையா? வியந்து பார்க்கின்றேன்.
நதிநீர் இணைப்பு பிரச்சனைக்காக 20ஆம் நூற்றாண்டு 21ஆம் நூற்றாண்டு என முப்பதாண்டுக் காலம் உச்சநீதிமன்ற படிகட்டுகளை ஏறி நல்லதொரு தீர்ப்பை அடியேன் பெற்றேன்.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு மதுவிற்பனைக்காக நீதிமன்றத்தில் போராடி சாதகமான தீர்ப்பை பெற்று இருக்கின்றது. 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்றவர்கள் இவர்கள். மக்கள் மீது எத்தனை அக்கறை இவர்களுக்கு? வியக்கின்றேன்.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...