Monday, August 30, 2021

#“உண்ணும் சோறு பருகும்நீர்

 “உண்ணும் சோறு பருகும்நீர்

தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”

என நம்மாழ்வாருடைய பிரபந்தத்திலே இருக்கிறது என்று ஒருவர் எழுதி இருந்தார்.
இந்த வெற்றிலை என்பதற்கு, வெற்றிலை என்று பெயர் வந்ததற்குக் காரணம், அது வெற்றி தருகிற இலை என்பதால். வெற்றிய்லையிலே ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்றே உண்டு.
மார்கோபோலோ தமிழ்நாட்டிற்கு வந்தபோது, புன்னைக்காயல் என்கிற ஊரில் அவருக்கு வெற்றிலை பாக்குத் தந்தார்கள்; வரவேற்றார்கள் என்று எழுதுகிறார்.ஆகவே வெற்றிலை அந்தக் காலத்திலே வழக்கத்திலே இருந்தது. மார்கோபோலோவே ஒரு குறிப்பு எழுதுகிற அளவிற்கு நமது இலைகளிலே வெற்றிலைக்கு ஒரு சிறப்பு இருந்திருக்கிறது.
30-8-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...