Tuesday, August 31, 2021

#தாய்_என்பவள்_சாதாரணமானவள்_அல்ல

 #தாய்_என்பவள்_சாதாரணமானவள்_அல்ல. நான் ஒரு கூட்டத்திலே குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. தாய்மார்களே நீங்கள் எல்லாம் நடமாடும் ஆலயங்கள். நான் உங்களிடம் வாக்குக் கேட்க வருகிற அரசியல்வாதிமட்டுமேயில்லை. ஆகவே, சத்தியத்திற்குச் சாட்சியம் சொல்லுகிறேன் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நடமாடுகின்ற ஆலயங்கள் என்று நான் உங்களைச் சொன்னதற்குக் காரணம், ஆலயங்களுக்குக் கருவறைகள் உண்டு; உங்களுக்கும் கருவறைகள் உண்டு என்று குறிப்பிட்டேன் இதுவே எனது நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

(1989இல் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட போது எட்டையபுரம் கூட்டத்தில் 4-1-1989 தேதியில் நான் பேசியது….)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-8-2021.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...