Wednesday, March 6, 2024
திருமாலிருஞ்சோலை- பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில்
திருமாலிருஞ்சோலை- பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில் ராஜகோபுரம் தாண்டியவுடன் நம்மை வரவேற்பது கல்யாணமண்டபம் . இந்த மண்டபத்தை கட்டியது இரு அரசர்கள் கிருஷ்ணப்பர் மற்றும் விஸ்வநாதர் என்று குறிப்புகள் உள்ளது .( நன்றி 1965 ல் வெளிவந்த திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு ) .இதில் கிருஷ்ணப்பர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரா அல்லது விஸ்வநாத நாயக்கருக்கு பிறகு பட்டத்திற்கு வந்த முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரா ? . பொதுஆண்டு 1529 முதல் 1564 - சுமார் 35 ஆண்டுகள் ஆண்ட விஸ்வநாத நாயக்கர் போற்றுதலுக்குரியவர் . 207 வருடங்கள் இருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்கு இந்த 35 ஆண்டுகள் பலத்த அஸ்திவாரமாக இருக்க வேண்டும் . சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் புது பொலிவுடன் இருக்கும் இந்த மண்டபம் ,அதன் கலைத்திறன் மிக்க சிலைகள் விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர் கால சிற்ப திறன்களுக்கு எடுத்து காட்டு. அழகர் கோயிலும் , விஜயநகர /மதுரை நாயக்கர் தொடர்புகள் என்று ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம் . -
Subscribe to:
Post Comments (Atom)
Yoga day column by VP
Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment