குடும்பத்தில் ஓய்வின்றி உழைக்கும் எந்த ஒரு தகப்பனையும் அவனது மகன் ஏன் வெறுக்கிறான். அதேநேரம் அதே தகப்பனை அவன் பெண் பிள்ளை ஆதர்ஷமாய் கொண்டாடுகிறதே அது எப்படி.
ஆனால் அதே குடும்பத்தில் ஆண்பிள்ளை தன் தாயை கொண்டாடுவதும்.. அந்த தாயும் தன் பெண் பிள்ளையை தேவைக்கும் அதிகமாக கடிந்து கொள்வதும் ஏன்….. ஒரு தகப்பன் தனக்கு பிறகு இந்த குடும்பத்திற்காக இன்னொரு பிடிமானத்தை உருவாக்க விரும்புகிறான். அதற்காக தன் மகனை நல்ல விதமாக உருவாக்கும் முயற்சியே அவனிடம் அவர் நடந்து கொள்ளும் கடுமை. அதே நேரம் என்றாவது தன்னை விட்டு பிரிவது நிச்சயம் என்பதால் அந்த பெண்பிள்ளை மீது அளவிற்கும் அதிகமாக பரிவுடன் நடந்து கொள்வது. இந்த காரணங்களால் தான் தன் தந்தையிடம் மகன் விலகி நிற்கிறான். பெண் பிள்ளை தன் தந்தையை கொண்டாடுகிறது. அதேநேரம்.. அதே பெண் பிள்ளையின் பிரிவு தாயின் பார்வையில் அவள் இன்னொரு வீட்டிற்கு செல்பவள் அவளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும் என்ற கண்டிப்பால் மகளிடம் இருந்து விலகி நிற்கிறாள். நாளை இந்த குடும்பத்தை ஆதரிக்க இருப்பவன் என்ற உறுதியில் அவனை போசிக்கிறாள்.
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment