Wednesday, June 30, 2021

#International_Day_of_Parliamentarism #இன்று_பன்னாட்டு_நாடாளுமன்ற_நாள்

#International_Day_of_Parliamentarism 
#இன்று_பன்னாட்டு_நாடாளுமன்ற_நாள்———————————————————-

நாடாளுமன்றத்தை அமைத்து, பாதுகாத்து பாராட்டுகின்ற வகையில் இந்த நாள் நினைவுபடுத்தப்படுகிறது.

ஜனநாயகம் என்பது கிரேக்கத்தின் நகர் அரசான ஏதென்சில் பிறந்து, உலகம் முழுவதும்  பரவியது. அதேபோல்  குடியரசு (Republic) இத்தாலியிலுள்ள ரோமில் பிறந்து அதுவும் உலகளவில் சென்றடைந்தது.

குடியரசும் ஜனநாயகமும் ஒரே நோக்கத்தில் சென்றாலும், அதன் அமைப்பு முறை, அதை இயக்குகின்ற இயங்குவியல் வித்யாசமானது.

ஜனநாயகம் கிரேக்கத்திலிருந்து பிரிட்டனுக்கு பெயர்ந்து அங்கு நாடாளுமன்ற அமைப்பு முறை (west minister form of government) என்ற முறை தொடங்கப்பட்டு அந்த நிலையில்தான் இரண்டு அடுக்குகள் கொண்ட bicameral நாடாளுமன்ற முறையை உலகம் முழுவதும் இன்றைக்கு நாம் அமைப்பு ரீதியாக வைத்துள்ளோம்.

பிரிட்டனில்தான்  அரசியல் சாசனத்துகான முதல் ஆவனம் மகாசாசனம் எழுதப்பட்டது. இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட அதன் பல காலனி நாடுகள், நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுகின்றன. இத்தாலி ரோமில் பிறந்த குடியரசு, பிரான்சிலும், அமெரிக்காவிலும் அதிபர் முறை ஆட்சியைக் கொண்டுள்ளது. 

இப்படி இரண்டு பகுதியான அமைப்பு ரீதியான வகைகள் இருந்தாலும், அனைத்தும் மக்கள் நல அரசாகவும், மக்கள் நல செயல்களுக்காகப் பேணுகின்ற அமைப்பு முறையே ஆகும். இன்றைக்கு நாடாளுமன்ற நாள். அதை நினைவு கூறுவோம். நாடாளுமன்ற முறையைச் செழுமைப்படுத்த உறுதி கொள்வோம்.

Parliament plays a crucial role in giving people a voice and representation to influence as well as shape policy. On International Day of Parliamentarism, commit to nourish our democracy….

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2021.


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...