Monday, June 28, 2021

#*கச்சத்தீவு விவகாரம்* #*kachchativu*



————————————
இதே நாள்,1974 ஜூன் 28 ஆம் நாள் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்காக முதல் ஒப்பந்தம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது.



கச்சத்தீவை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாதென அனைத்துக் கட்சி கூட்டத்தை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் நடத்தினார்.  தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தைப் பொருட்படுத்தாது அன்றைய இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது பல எதிர்ப்பலைகளை எழுப்பியது.







முதல் ஒப்பந்த்தில்,இந்திய பிரதமரோ இந்திராகாந்தி 26-6-1974இல் டில்லியில் கையெப்மிட்டார்,இலங்கை பிரதமரோ ஶ்ரீமவோ ஆர்.டி. பண்டாரநாயக்க அதில் 28-6-1974இல் கொழும்பில் வைத்து கையெழுத்திட்னர்.ஆனால் இறுதி இராண்டாம் ஒப்பந்தம் அதிகாரிகள் மட்டத்தில், இந்திய வெளிவிவகார செயலாளர் கேவல் சிங்,இலங்கை வெளிவிவகார செயலாளர் டப்ளியூ.டி  ஜெயசிங்கே கடிதங்கள், ஆவணங்கள் மாற்றுவழி 23-3-1976இல் இறுதி இவர்களின் கையெப்பமிட்டு,ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டு பிரதமர்கள் கையெப்பம்இடவில்லை.ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் பெறவில்லை.
  
இதேபோல் கச்சத்தீவு வழங்கும் இரண்டாவது ஒப்பந்தம் இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்போதும் இரு நாட்டு பிரதமர்கள் அதில் கையெழுத்து செய்யவில்லை.
தமிழகத்தில் ஜனசங்க முக்கிய தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணாமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.  இவையெல்லாம் 2007 இல் வெளியான எனது நூலான 'கனவாய் போன கச்சத் தீவு' என்ற  நூலில் மிக விரிவாக எழுதியுள்ளேன். இது குறித்தான பல முறை பதிவு சமூக வலைத்தளத்தில் உள்ளது.

இதே போலவே, தமிழக சட்டசபையின் ஒப்புதல் இன்றி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி - அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையேயான கடிதங்கள் மூலமாகவே தமிழக மேலவை கலைக்கப்பட்டது. இவை வரலாற்று சான்றுகள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2021.

https://www.facebook.com/146567318846976/posts/1566047296898964/?d=n

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...