Tuesday, June 29, 2021

“#மகாசாசனம் - #மேக்னகார்ட்டா -#MagnaCarta



________________________________
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக அழைக்கப்படும் பிரிட்டன் எப்படித் தன்னுடைய ஜனநாயக நெறிகளை படிப்படியாக வகுத்துக் கொண்டது என்பதற்கு முதல் சாசனம் இந்த மகாசாசனம் ஆகும். இது உலகிற்கே வழிகாட்டுகின்ற, ஆதிகாலத்தில் தோலில் எழுதப்பட்ட முதல் உலகசாசனம் ஆகும்.

நகர அரசுகள் கிரேக்கத்தின் ஏதேன்சில் ஜனநாயகம் (Democracy)உலகில் பிறந்தது, குடியரசு(Republic)
இத்தாலி ரோமில்  ஏற்பட்டாலும் எழுத்தால் எழுதப்பட்ட முதல் சாசனம் இதுதான். இந்தியாப்போன்ற பல நாடுகளைப் போல பிரிட்டனிலும், இஸ்ரேலிலும் எழுதப்பட்ட அரசியல்சாசனம் கிடையாது. மரபுகளும் காலங்காலமாக உள்ள நடைமுறைகளையே அங்கு அரசியல் சாசனக்கூறுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

****

மகாசாசனம் (மேக்ன கர்ட்டா ) 

  சரியாக 806 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின்  பொதுமக்கள், நிலபிரபுக்கள், தனவந்தர்கள் ஒன்றிணைந்து செய்த கிளர்ச்சிகளின் விளைவாக, 1215-ம் வருடம் ஜூன் 15-ம் தேதி அந்நாட்டின் விண்ட்சர் அருகே ரனிமேட்டில் (Runnymede) ஜான் மன்னர் முன்னிலையில் மக்களைக் காக்கும் உரிமைசாசனமான மகாசாசனம் என்னும் மேக்னகர்ட்டா (MagnaCarta) எழுதப்பட்டது. 

ஒரு முழுமையான முடியாட்சியின் காலம் முடிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகார பரவலாக்கம் அப்போதிருந்து படிப்படியாகத் தொடங்கியது. வரும்

 மகாசாசனத்தின் மூலம் பிரிட்டன் அரசரும் அந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டவராகிறார். இதன்படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தின் ஆட்சி, எந்தவித விசாரணையுமில்லாமல் எவரையும் தண்டிக்கக் கூடாது, குற்றவாளிக்கும் தன்னுடைய விளக்கத்தை அளிக்க உரிமைகள் வழங்கவேண்டும், தேவாலயங்கள் அனைத்தும் சுதந்திரமாக செயல்படும். நாட்டின் மன்னர் தன் குடிமக்களோடு கலந்து ஆலோசிக்காமல் எந்த புதிய வரியையும் விதித்து விட முடியாது. 

எந்த காரணத்தைக் கொண்டும் நீதி விற்கப்பட மாட்டாது. குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் எந்த ஒரு தனிமனிதருக்கும் பொதுவில் வாதாட உரிமை உண்டு என மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, ஜனநாயக தத்துவத்தின் அடிப்படையில் படைத்ததுதான் இந்த மகாசாசனம். தற்போதுள்ள எந்த அரசியல் உரிமை சாசனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும் மேக்ன கர்ட்டா பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மகாசாசனம் பற்றிய பல தரவுகள் பிரிட்டனில் காலம்காலமாக கதைகள், நாட்டுப் பாடல்கள் மூலம் வரலாற்றில் பதியப் பட்டு வந்துள்ளது. 

யூதர்களுக்கு மோசே, இந்தியாவில் மனு, மெசபடோமியாவில் ஹமுராபி, சீனாவில் கன்பூசியஸ் மற்றும் ரோமில் ஜஸ்டினியன் ஆகிய சட்டங்கள் மேக்ன கர்ட்டாவுக்கு முன்பே இருந்திருந்தாலும் மேக்னகர்ட்டா அவற்றிலிருந்து வேறுபட்டு, மக்களுக்கான உரிமைகளை தெளிவு படுத்துகின்ற சாசனமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் மேக்ன கர்ட்டா உரிமையாக அளிக்கப்பட்டதல்ல, அரசரிடமே கேட்டுப் பெறப்பட்டது. 

கிரேக்கத்தில் அமைக்கப்பட்ட நகர அரசுகளும், ரோம் அரசுகளும் ஆதியில் ஜனநாயகத்தின் தொட்டிலாகக் கருதப்பட்டது. உலகில் பிரிட்டனிலும், இஸ்ரேலிலும் அரசியல் அமைப்புச்சட்டம் எழுதப்படவில்லை. ஆனால் மரபுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்களைக் கொண்டு அங்கு அரசாங்கம் இயங்குகின்றது. இதற்கு அடிப்படைக் காரணியாக இந்த மகாசாசனம் பிரிட்டனில் இருந்தது. 

ஆதியில் பிரிட்டனில் வழக்கு விசாரணைகள் சரியாக நடத்தாமல், கடுமையான தண்டனைகளான, கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் மனித உயிர்களைத் தள்ளுவது போன்ற மட்டமான நடைமுறைகள் இருந்தன.  பெரும் போராட்டத்தின் பிறகு ஜான்மன்னர் கையொப்பமிட்டு மகாசாசனம் பிரகடனம் செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் எல்லைப் பகுதிகளை பிரான்ஸ்சிடம் இழந்த ஜான் மன்னருக்கு, மேக்ன கர்ட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன்மூலம் முதன்முதலாக குடியாட்சிக்கான விதை அங்கு விதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அரசியல்  புரட்சிகளினால் இந்தியா உட்பட ஜனநாயக நாடுகள் ஒவ்வொன்றின் தலையெழுத்தையும் மேக்னகர்ட்டா தீர்மானித்தது. 
மேக்ன கர்ட்டா, ஒரு மன்னர் தன்னையும் சட்டத்துக்குள் ஆட்படுத்தி இயற்றிய மிகப் பழமையான முதல் அரசப் பிரகடனம். ஒருவர் எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும் சட்டம் அவரை விட உயர்வானது என்ற கருத்து இதன்மூலம் வலுவாக்கப்பட்டது. 

இந்த மகாசாசனம் தான் அரசியலமைப்பு பிரகடனங்களில் மிகச் சிறந்தது என்கிறார் ஆங்கிலேய நீதிபதி லார்ட் டென்னிங். இதுவே தன்னிச்சையான ஒரு கொடுங்கோலனின் அதிகார துஷ்ப்ரயோகத்திலிருந்து ஒரு தனிமனினை காக்கும் அடித்தளம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். 

ஜானுக்கு முன்பும், மேக்ன கர்ட்டாவுக்கு முன்பும் அதாவது 597-ம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் சட்டங்கள் இருந்தன. அவற்றை சாக்ஸ்சன் சட்டம் (saxon law) என்று குறிப்பிடுகின்றனர். 

1066-ம் ஆண்டு வில்லியம் தலைமையில் பிரான்சின் நார்மான்கள் இங்கிலாந்தை கைப்பற்றினர். 1100-ம் ஆண்டு முதலாம் ஹென்றி நார்மான்களின் சட்டங்களோடு சாக்ஸன் சட்டத்தையும் இணைத்து ஒரு புதிய சட்டத்தை அங்கு உருவாக்குகிறார். 

இங்கிலாந்தில் உரிமைவேட்கையின் முதல் மோதல் இரண்டாம் ஹென்றிக்கும் கேன்ட்டர்பெரி பேராயர் தாமஸ் பெக்கட்டினுக்கும் இடையில் துவங்கியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்த நான்காவது நாள் ஜெபத்திலிருந்த பேராயர் தாமஸ் பெக்கடின் கொலை செய்யப்பட, அவரது மரணம் பிரிட்டன் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியது. அதன்பிறகு இங்கிலாந்தை பதினெட்டு வருடங்கள் இரண்டாம் ஹென்றி ஆட்சி புரிந்தார் .

நிர்வாகம், ஆட்சிமுறை, சட்டம் ஆகியவற்றை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டாம் ஹென்றி, வழக்குகளை விசாரிக்க பொதுவான ஜூரிகளை அமர்த்தினார். நிலப்பிரபுக்கள் மூலம் தன்னிச்சையான விதிகள் இருந்த இடத்தில் ஆண், பெண்களுக்கும் சமமான ஒரு பொதுவிதியை இந்த ஜூரிகள் மூலம் நிர்ணயித்தார். இந்த புதிய விதி எதிர்கால இங்கிலாந்தின் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது என்றால் மிகையானதல்ல. 

இரண்டாம் ஹென்றிக்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மூத்த மகன் முதலாம் ரிச்சர்ட் பாலஸ்தீனத்தில் போர் முனையிலிருந்து திரும்பியபோது எதிரிகளால் கைது செய்யப்பட்டார். இடைப்பட்ட காலங்களில் இங்கிலாந்தை ஆட்சி செய்த ஜான் நாட்டினை சின்னாபின்னமாகினார். முதலாம் ரிச்சர்ட் திரும்பி வந்து ஆட்சியை கைப்பற்றினாலும் ஒரு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைய மீண்டும் இங்கிலாந்து ஜானின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வந்தது.  

ஏற்கனவே அதிக வரி செலுத்திவந்த நிலப்பிரபுக்கள் மேல் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. ஜான் கேண்டர்பர்ரியின் பேராயரோடும் மோதினார்.  இந்தகட்டத்தில் பிரிட்டனில் குழப்பங்கள் விளைந்து, அரசநிர்வாகம் மக்கள் விரோதமாக மாறி மக்கள் தேவையில்லாமல் தண்டிக்கப் பட்டனர். சர்வாதிகாரம் தலைதூக்கி நர்த்தனமாடியது.  

இதற்கிடையில் ஐரோப்பாவில் ஜெர்மனுடன் இணைந்து பிரான்சுக்கு எதிராக போரிட்ட ஜானின் படைகள் தோல்வியடைந்தன. நகரங்களில் கலகங்கள் ஏற்பட, பிரிட்டன் மக்கள் ஜான் மன்னருக்கு எதிராக உரிமைகள் கேட்டுப் போராடத் துவங்கினர். அதன் விளைவே மேக்னகர்ட்டா என்னும் மகாசாசனத்தின் உதயம். 
பல சுற்றுகளுக்குப் பிறகு, 1215ம் வருடம் மகாசாசனம் அரசு முத்திரை பதிக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. This Little Britain நூலாசிரியர் ஹாரி பிங்கமின் வார்த்தைகளில் சொல்வதானால், பிரிட்டன் இந்த உலகுக்கு கொடுத்த ஆகச் சிறந்த அருட்கொடை  ‘மேக்னா கார்ட்டா’. மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர். சட்டத்தை மீறினால், அவரது நிலங்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்கிறது மாகாசாசனம். அரசர் தான் எல்லாமும் என்று இருந்து வந்த காலத்தில் இது புரட்சிகரமான ஓர் அம்சம் என்று திகைக்கிறார் ஹாரி பிங்கம்.

பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. இவ்விருதரப்பு மட்டுமே மேக்னகார்ட்டாவின் மகத்துவத்தை அறிந்திருந்தது. ஆகவே பிரகடனப்படுத்தப்பட்ட மகாசாசனம் பெயருக்குத்தான் இருந்ததே ஒழிய நடைமுறைப்படுத்தப் படவில்லை. சாசனம் உருவான பிறகும் ஜான் அடக்குமுறையை ஏவுவதும், படுகொலைகள் நிகழ்வதும், மக்கள் தொடர்ந்து போராடுவதும் நடந்து கொண்டுதான் இருந்தது. 

இந்நிலையில் 1216ம் ஆண்டு, பிரெஞ்சு ராணுவம் மீண்டும் பிரிட்டனில் கால் பதித்தது. இம்முறை இவர்களைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஜான், தன் படைகளை விட்டுவிட்டு ஓடிப்போனார். பிரான்ஸ் பிரிட்டனை வெற்றிக்கொண்ட அந்தத் தருணத்தில் இறந்து போனார். 

ஜான் மன்னரின் இடத்தில் ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஹென்றி, முதல் காரியமாக மேக்னா கார்ட்டாவைத் தூசிதட்டினார். அதன் ராஜாங்க உபயோகம் அவருக்குத் தெரிந்திருந்தது. பிரிட்டனிலிருந்து பிரான்ஸைத் துரத்தியடிக்க வேண்டுமானால் படைகள் மட்டும் போதாது, மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். மேக்ன கர்ட்டா  அதற்கு கைகொடுத்தது. 

1217-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த போது, மேக்ன கார்ட்டா சிறிய மாற்றங்களோடு சமாதான ஒப்பந்தமாக அறிவிக்கப்பட்டது. 1225-ல் மீண்டும் அந்த அதிகாரபத்திரம் மறுவெளியீடு செய்யப்பட்டு 1297-ம் ஆண்டு இங்கிலாந்து சட்டத்தில் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் பிரிட்டண் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த புதியசட்டத் திருத்தங்களால் மேக்னகர்ட்டா தன் நடைமுறை முக்கியத்துவத்தை சிலசமயங்களில் இழக்கவும் நேர்ந்தது. 

ஆரம்பகாலத்தில் மேக்ன கர்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமாகவே இருந்தது. அவையும் அலங்காரச் சட்டங்களாகவே சேர்க்கப்பட்டவை. சாசனப் பிரிவு 39 மற்றும் 40,“எந்தவித சுதந்தர மனிதனும் அநீதியாக கைது செய்யப்படவோ, சட்டத்துக்கு விரோதமாக சிறையில் அடைக்கவோ, நாடுகடத்தவோ முடியாது. எந்த சுதந்தர மனிதனின் உரிமையும் பறிக்க முடியாது என்கிறது. 
 
ஆனால் இந்த அலங்கார மொழிகளுக்கு உள்ளேயும் ஒரு திருகல் வேலை இருந்தது. அரசர் அளிக்கும் உரிமைகள் சுதந்தர மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். யார் சுதந்திர மனிதன் என்பதை அரசர் தான் தீர்மானிப்பார். தங்களுக்குப் பிடிக்காத புரட்சியாளர்களை, நிச்சயம் சுதந்தர மனிதர்கள் என்று ஒருபோதும் அழைக்கப் போவதில்லை. அவர்களுக்கு உரிமைகள் வழங்கப் போவதும் இல்லை.

பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் மேக்ன கர்ட்டா ஒரு புதிய எழுச்சியை கண்டது. வழக்கறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் ஆங்கிலோ-சாக்ஸன் நாட்கள் திரும்ப வந்ததாக கருத ஆரம்பித்தனர். 1066-ல் நார்மன் படையெடுப்புக்கு பின்பு காணாமல் போய் விட்ட இந்த உரிமைகளை மேக்ன கார்ட்டாவை  பயன்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்றும், ஆட்கொணர்வு உரிமையினை (habeas corpus) மீண்டும் பாராளுமன்ற  தீர்மானங்களில் சேர்க்க முடியும் என்றும் வாதிட்டனர். 

நீதித்துறை மேக்ன கர்ட்டாவை அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக வாதிட பயன்படுத்திக் கொண்டன. 1640ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முதலாம் 
சார்லசுக்கு மரண தண்டனை விதிக்கும் வரையிலும் மேக்ன கர்ட்டாவை பற்றிய விவாதங்கள் அடங்கியிருந்தது.

1688-ல் மேக்ன கர்ட்டா ஒரு ஒளிமயமான புரட்சிக்கு பிறகு ஒவ்வொரு தனிமனிதரின் உரிமைகளை பாதுகாக்கும் மூன்று முக்கிய ஆவணங்களில் ஒன்றாக முடியாட்சியின் கீழ் சேர்க்கப்பட்டது. இந்த அதிகாரப் பத்திரம் 1789ம் ஆண்டு அமெரிக்க காலனிகள் உருவாவதற்கும், அமெரிக்காவின்  அரசியலமைப்புச் சாசனம் உருவாவதற்கும் உதவியாக இருந்தது. இன்றைக்கும் மேக்னகர்ட்டா சுதந்திரத்தின் சின்னம் என அரசியலாளர்களாலும், உலகநாடுகளின் தலைவர்களாலும் மேற்கோள் காட்டப்படுகிறது. 

1215ம் ஆண்டு, மேக்ன கர்ட்டாவின் 1215 மூல சாசனங்கள் பதப்படுத்தப்பட்ட கன்றின் தோல்மீது குயில் இறகினைக் கொண்டு, இலத்தீன் மொழியில் எழுதப்பட்டு, மெழுகு மற்றும் பிசினால் முத்திரை இடப்பட்டது. 

தற்போது மேக்ன கர்ட்டாவின் 1215 மூலசாசனங்களில் நான்கு மட்டும் பிரிட்டிஷ் நூலகத்திலும், லிங்கன் நூலகத்திலும் மற்றும் சாலிஸ்பரி தேவாலயங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மற்றும் தனியார் உடமையாக சில மூலசாசனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ளன. 

1759-ல் அறுபத்தி மூன்று பாகங்களாக வில்லியம் ப்ளாக்ஸ்டோனினால் பிரிக்கப்பட்டாலும்  அசல் மேக்ன கர்ட்டா ஒற்றையான, உடையாத, நீண்ட உரையினால் உருவாக்கப்பட்டது. இந்த நான்கு அசல் மேக்ன கர்ட்டா சாசனமும், அது உருவான 800 வது ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த,
பிப்ரவரி 3, 2015 நாளன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில்  பொதுமக்கள் பார்வைக்குக் வைக்கப்பட்டது . 

மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள். அடிப்படை உரிமைகள் என்ற கூறுகளுக்கு அடிப்படையே இந்த மேக்ன கர்ட்டா தான். இவ்வாறான மகாசாசனம் உலக வரலாற்றில் முதல் மக்களின் சாசனமாகும். அரசியல் அரங்கத்தில் இந்த அருட்கொடை கிடைத்ததை பிரிட்டன் மட்டுமல்லாமல் பன்னாட்டளவில் கொண்டாடவேண்டும். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-06-2021.

Images of a rare copy of Magna Carta at St John's College are being made available to coincide with the document's 800th anniversary.

Even if historians had seen a record of the St John’s copy in the past, they would probably not have recognised its significance as they would have been unaware that it was in this form

A rare 14th Century copy of Magna Carta that appears to have been unnoticed for generations, until it was uncovered during research marking the document’s 800th anniversary, can be viewed online from today (Friday, 12 June).
The copy, which is owned by St John’s College, University of Cambridge, dates back to the reign of Edward I, and is one of just a handful of surviving statute rolls that recite clauses from the famous charter. Edward I was one of the monarchs who reissued a version of the Magna Carta, which was originally produced in 1215, during the reign of King John.

Although it had been preserved in the College archives, the manuscript appears to have been overlooked – and may indeed have been completely unknown to historians – until now. Its significance was only realised when Professor Nicholas Vincent, from the University of East Anglia and head of the national Magna Carta Project, contacted the College to enquire about documents that be believed contained clauses from the charter.

Professor Vincent realised that the item is, in fact, an early-to-mid 14th Century example of a type of statute roll that would have been used to circulate parts of Magna Carta throughout medieval England. While these were once commonplace, only about a dozen are known to exist today.

Ahead of the anniversary of Magna Carta, on June 15th, the College is releasing images of the copy online along with a short accompanying film. Members of the public can also view the charter by making an appointment to visit the College archives.

The document’s importance is thought to have gone undetected because no systematic attempt to collect the surviving copies of Magna Carta had been undertaken until the 800th anniversary project was launched. Even if historians had seen a record of the St John’s copy in the past, they would probably not have recognised its significance as they would have been unaware that it was in roll form.

In fact, for statute rolls of Magna Carta to survive is very rare. Earlier generations considered the parchment of which they were made very useful for secondary purposes, including lighting fires, and even as animal feed! As a result, most such rolls were lost. Judging by the valuation of similar items at auction, the St John’s copy is thought to be worth several tens of thousands of pounds.

Although it was famously agreed to by King John at Runnymeade, near Windsor, on 15 June 1215, much of Magna Carta had been repealed or rewritten within 10 years of its issue. Modified versions were reissued under both Henry III and Edward I, with some of the more radical clauses in particular removed.

Edward agreed to a renewal of Magna Carta in 1297, and then reissued it on 28 March 1300. The roll at St John’s College recites this 1300 reissue and may have been preserved by the Hospital of St John that once stood on part of what is now the College.

In common with various other copies of Magna Carta that have surfaced in the past, the manuscript is part of a larger document. In this case it was stitched together with a lawyer’s copy of the assize of bread and ale, a law which regulated the price, weight and quality of the bread and beer manufactured and sold in England, and was the first in British history to regulate the production and sale of food. The roll also recites clauses from the Forest Charter, which was issued as a companion document to Magna Carta in 1217 and dealt with rights of access to the royal forest.

The Magna Carta Project, which is led by Professor Vincent, is a collaborative initiative between several universities that aims to track down lost originals of Magna Carta and create an online database featuring commentary, translations, and research findings about the charter. The team are sifting through hundreds of archives as part of their research.

The St John’s copy is being made available to view as part of the nationwide Explore Your Archive Magna Carta campaign, in which archives around the country that have a copy of Magna Carta are being encouraged to make it available to the wider public.

Tracy Deakin, Archivist at St John’s College, said that it was not uncommon for long-forgotten historical documents to resurface from archives, many of which are being made available publically in a manner that was not possible a few decades ago. 

“This sort of discovery is a lot more typical than people might think,” she said. 
“A couple of generations back, archivists did a very different type of job and would not have been able to command the same kind of accessible detail about everything in their archive in the way that we can now.” (courtesy - Cambridge Univerity )
•••••
June 15, 1215 the Magna Carta was signed by King John. The spirit is clearly present in the Declaration of Independence, which used the Magna Carta as a model for free men petitioning a despotic government for their God-given rights to “life, liberty and the pursuit of happiness”.  But the Magna Carta’s legacy is reflected most clearly in the Bill of Rights.  There were 25 Barons of the Magna Carta that were entrusted by the terms of clause 61 to ensure the Kings compliance. I am proud to say that I am a direct descendant of 13  of those Barons. 

Hugh le Bigod - 3rd Earl of Norfolk
Richard de Clare - 3rd Earl of Hertford 
Alan of Galloway -4th Lord of Galloway
William de Mowbray-1st Lord of Mowbray 
Roger le Bigod-2nd Earl of Norfolk
William d’Albini- 3rd Lord of Belvoir
William Huntingfield- Sheriff of Norfolk
Robert de Vere- 3rd Earl of Oxford
Henry de Bohun-1st Earl of Hereford
William VI d’Aubigny-3rd Earl of Arundel
John de Lacy- 1st Earl of Lincoln
Saher IV de Quincy- 1st Earl of Winchester
William de Warenne-5th Earl of Surrey
Gilbert de Clare-4th Earl of Hertford 
Robert Fitz Walter- Lord of Dunmow Castle
William Marshal- Knight Templar- 1st Earl of Pembroke
Robert I de Roos- Knight Templar
And John I Plantagenet- King of England

#MagnaCarta
#GreatChatter 

#KSR_Posts
#KsRadhakrishnan
29-6-2021.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...