பேராசிரியர் .மு.பி.பாலசுப்பரமணியம் மறைவு!
தென்காசி மாவட்டத்தில் பிறந்து, திராவிட மாணவர்கள் முன்னேற்றக் கழக
அமைப்புத் தொடங்கிய காலத்திலேயே
பங்கு பெற்று, அறிஞர் அண்ணாவின்
அன்பைப் பெற்றவர்.
திராவிட நாடு, காஞ்சி இதழ்களில் கவிதை கட்டுரைகளை எழுதியவர்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையில் ஆசிரியராக, துறைத் தலைவராகப் பணியாற்றிய போதும், பின்பு கல்லூரியின் முதல்வராக உயர்ந்த போதும் கழக இலக்கிய பணிகளை ஆற்றியவர்.
பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, தமிழாலயம் என்ற இலக்கிய இதழைத் நடத்தினார்.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:
Post a Comment