Thursday, May 28, 2026

2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வின் தோல்வியை

 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வின் தோல்வியை ஒட்டி மாவட்ட நிர்வாகங்களைப் பிரித்து வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு இணங்க ஆராய்ந்து அறிக்கை தர வேண்டி கலைஞர் 6 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவிற்கான அறிக்கையைத் தயார் செய்து ஒப்படைக்கும் பொறுப்பு என்னிடம் தான் வழங்கப்பட்டது. மாவட்டங்களை சுற்றி பார்த்துவிட்டுச் செய்யலாமா என்ற போது வேண்டாம் உடனடியாக இங்கேயே அறிக்கை தயார் செய்யுங்கள் என்று ஸ்டாலின் சொன்னார்! உடனடியாக இரண்டே நாட்களில் 40 பக்க அறிக்கையை தயார் செய்து கொடுத்தோம்.

இன்றைக்கு ஸ்டாலின் தனது தோல்விக்காக மீண்டும் கட்சியை வலிமைப்படுத்த ஆலோசனைக் குழு உறுப்பினர்களை நியமிக்கிறார்! அன்றைக்கு, 2014 இல் நான் சொன்னபடி கேட்டு இருந்தால் இந்த மாவட்டத் தலைவர்களின் அராஜகம் அவர்களின் குடும்பத்தார் சுயநல போக்கு கட்சியின் மீது உண்மையின்மை சொந்த சுய லாபங்களுக்காக அவர்கள் ஆடிய ஆட்டங்கள் அம்பலமாகி இருக்கும்! எல்லாவற்றையும் அறிக்கையாகக் கொடுத்த பிறகும் அதை ஸ்டாலின் உதாசீனம் செய்தார்! அவருக்குத்தான் என்னைப் பிடிக்காதே! அண்ணன் எப்பச் சாவான் திண்ணை எப்பக் கிடைக்கும்!என்று இருந்தவராயிற்றே! 2014 இல் நடந்த இந்த சம்பவத்தில் முதலிடத்தில் இருந்து செயல்பட்டவனை மூன்றாம் இடத்துக்கு தள்ளி தினமணியில் செய்தி வந்திருக்கிறது. அன்று அறிக்கையின்படி 65 மாவட்டங்கள் திமுக அமைப்பு மாவட்டங்களாக மாற்றப்பட்டது. dinamani.com/tamilnadu/2014 Original திமுகவினர் மீது நம்பிக்கை வைங்கள் ஸ்டாலின் அவர்களே! உங்கள் மருமகன் சொன்னபடி,அதிமுக முனனாள் அமைச்சர்களை நம்பி மோசம் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!! #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…