அரசிற்குப் புலிகள் சம்பந்தமான பல இரகசியங்களைக் காட்டிக்கொடுத்து, போராட்டத்தையும் அதன் கட்டமைப்பையும் நிர்மூலமாக்கத் துணை நின்றனர்.
"நிறைய மக்கள் இறந்தால் உலக நாடுகள் தலையிடும், அமெரிக்கா நேரடியாகக் களம் இறங்கும்" என்ற தவறான, போலியான இராஜதந்திரத் தகவல்களைப் புலிகளின் தலைமைக்கு வழங்கி, பெருமளவு மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒன்றுகூடவும், அவர்கள் கொன்றொழிக்கப்படவும் காரணமான 'அரசியல் மேதாவிகளும்' இதில் அடங்குவர். ஆயுதக் கொள்வனவில் மிகப்பெரிய ஊழல்களைச் செய்து, தரம் குறைந்த ஆயுதங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு, அந்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இலங்கை கடற்படைக்கே கசியவிட்டு, கப்பல்களை மூழ்கடித்த புலம்பெயர் தமிழர்களும் உண்டு. இதன் மூலம் முழு நஷ்டத்தையும் இயக்கத்தின் தலையில் கட்டிவிட்டு, இன்சூரன்ஸ் மற்றும் கமிஷன் பணத்தில் கொழுத்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் தம்மை ஈழ உணவாளர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், முள்ளிவாய்க்காலில் நமது உறவுகள் அநாதரவாகக் கொல்லப்படவும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தவர்களே ஆவர். ஆண்டுக்கு ஒருமுறை சிரட்டைக் கஞ்சி குடித்துவிட்டு, உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இழந்த மண்ணையோ, மக்களுக்கான நீதியையோ நாம் பெற்றுவிட முடியாது. நம்மைச் சுற்றி இருக்கும் இத்தகைய துரோகிகளையும், சுயநல சக்திகளையும் அடையாளம் கண்டு புறக்கணிப்பதே, மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். வரலாறு எவரையும் மன்னிக்காது; குறிப்பாகத் துரோகிகளை அது ஒருபோதும் மன்னிக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
விண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.
விண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.தகுதியுடையோர் தயங்கவே செய்வர். நடுவர் குழுவின் பணி,சிறந்தோரைக் கண்டு, தேர்ந்து பரிசளிப்பதுவே.இந்த நடை...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment