Saturday, May 30, 2026

ஒரே நாடு, ஒரே தேர்தல்!!!!

 ஒரே நாடு, ஒரே தேர்தல்!!!!

"ஒரே நாடு ஒரே தேர்தல்" கட்டாய தேவை என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்பது இன்றைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா செய்ததன் மூலம் உணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட உரிமையை பறிக்கும் விதமாக கட்சி தாவல் தடை சட்டம் வந்தது. மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி செய்வது புறந்தள்ள பட்டு கட்சியின் பிரதிநிதிகள் மக்களை ஆட்சி செய்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் மதசார்புடன் செயல்பட்டாலும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்த பிறகும் கூட தமிழக வெற்றி கழகம் தனது பெரும்பான்மை எண்ணிக்கையை தொடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வருந்தத்தக்கது. எதிர்க்கட்சியாக நின்று பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தகுதியை கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் இன்றோடு இழந்து விட்டதாகவே கருதுகிறேன்

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...