Tuesday, September 27, 2016

பாலஸ்தீனப் பிரச்சினை

இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை இல்லை என்று பல சுற்றுகள் நடந்துவிட்டன. உலக நாடுகள் அனைத்தும் இதில் அக்கறை காட்டிவிட்டன.  2015ல் பாரீசில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் ஏதோ ஒப்புக்கு பேச்சுவார்த்தை நடந்தது. உருப்படியாக 2010க்கு பிறகு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா கோரியதால் இஸ்ரேல் மேற்குக்கரைப் பகுதியில் குடியிருப்புகள் உருவாக்குவதை 10 மாத காலம் வரை நிறுத்தி வைத்தது. இப்படியான நிலையில் ஒரு தீர்வு எட்டாத உலகப் பிரச்சினையாக விளங்குகின்ற நிலையில் ரஷ்ய அதிபர் புதின், இந்த இரண்டு நாடுகளையும் பிரச்சினைகளை பேச முயற்சி எடுத்துக்கொண்டு வருகின்றார். ஒரு காலத்தில் இட்சாக் ராபீனும், யாசர் அராபத்தும் கை குலுக்கினார்கள். 2008ல் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வரும் என்று எதிர்பார்த்தும், எந்த தீர்வும் எட்டாமல் போய்விட்டது. மேற்குக்கரையிலிருந்தும் கிழக்கு இஸ்ரேல் அரபுப் பகுதியிலிருந்தும் திரும்பப்பெற்று பழைய நகரை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வைக்க இஸ்ரேல் ஒத்துக்கொண்டது. அப்போது பாலஸ்தீனம் சற்று அமைதி காத்தது. இப்படியான நிலையில் சிந்துபாத் கதையைப் போல இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுடன் பாலஸ்தீன அப்பாஸ் பேச ரஷ்ய அதிபர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எந்த அளவுக்கு கைகூடும் என்பது போகபோகத்தான் தெரியும்.

ஆனால் மேற்குக் கரையில் உள்ள யூதர்களை பாலஸ்தீனியர்கள் அழிக்கப்பார்க்கிறார்கள் என்று நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.  1948ல் நக்பா நிகழ்வின்போது கட்டாயம் வெளியேற்றப்பட்டவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பிரச்சினைகள் கிளப்பப்பட்டது.  பாலஸ்தீனியர்களுடைய பூர்வீக பூமியில் வசிக்க உரிமை உண்டு உலக நாடுகள் சொன்னபோதும் இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.  15 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகள் இஸ்ரேலால் பறிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் ஒரு பக்கம் எழுந்தவண்ணம் உள்ளது.

#பாலஸ்தீனம் #இஸ்ரேல்பிரச்சினை #ksrposting #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...