Tuesday, September 27, 2016

காவிரி

1924ல் சென்னை மைசூர் இடையே காவிரி  நதி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்576,68டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை. 

இந்திரா ஆட்சியின் போது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் 389டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை. 

காவிரி ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தரச் சொன்னது 205டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை.

 அதன் இறுதி அறிக்கை சொன்னது 192டிஎம்சி. இதுவும் கிடைக்கவில்லை. 

இறுதியாக தமிழக முதல்வர் செயலலிதா கோரியது 50டிஎம்சி. உச்ச நீதிமன்றத்தின் ஆணைபடி கிடைத்ததோ 15டிஎம்சி தண்ணீர்.

. இபபடி வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தைப் பற்றி பிரகாஷ்காரத் கூறுகிறார் "ஆற்றுப்படுகையின் கீழ் உள்ள மாநிலமான தமிழகம்  கடந்த காலத்தில் வரலாற்று ரீதியாக தனக்கு கிடைத்த தண்ணீர் அளவு சிறிதும் குறையாமல் இப்பொழுதும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்துவது பிரச்சனையை தீர்க்க உதவாது" தீக்கதிர்(25,9,2016)   

எத்தனை அயோக்கியத்தனம். முல்லை பெரியாறு ஆணை நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அடாவடி செய்த போதும் முல்லை பெரியாறு அணை உடைவது போல் அச்சுதானந்தன் கிராபிக்ஸ் படம் காட்டிய போதும் மௌனவிரதம் இருந்து விட்டு கேரளாவுக்கு தமிழ் நாட்டிலிருந்து போகும் பொருட்களை தடை செய்கிறார்கள் என்றவுடன் குலை பதறி ஓடி வந்தனர்

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...