Thursday, September 29, 2016

தமிழ்நாடு நாட்டுப்புறக் கதை.

சிரியா விவகாரம் முதல் காவிரி கலவரம் வரை அனைத்தையும் பற்றி இரண்டு நாய்கள் பேசிக் கொண்டு இருந்தன. அப்போது ஆட்டுக்கூட்டம் ஒன்று இந்த நாய்களைக் கடந்து போனது.

இந்த நாட்டில் இவ்வளவு ஆடுகள் இருக்கிறதா என்று நாய்கள் இரண்டும் அதிர்ச்சி அடைந்தது.
நாட்டில் நாய்கள் அதிகமா
ஆடுகள் அதிகமா என்ற சந்தேகம் வந்தது.
இதை யாரிடம் போய்க் கேட்பது என்று தெரியாமல் நரியிடம் போய்க் கேட்டது.

" நாட்டில் நாய்கள் தான் அதிகம். ஆனால் ஆடுகள் அதிகமாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறதே?" என்று அந்த இரண்டு நாய்களும் கோபப்பட்டது.
" நாய்கள் தான் அதிகம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டது நரி.
" நாய்களாகிய நாங்கள் ஒரே நேரத்தில் பல குட்டிகள் போடுகிறோம். ஆடு ஒரு குட்டி தானே போடுகிறது" என்றது நாய்.

இதற்கு உண்மையைப் புரிய வைக்க நினைத்த நரி.... என்னிடம் பத்து நாய்களையும் பத்து ஆடுகளையும் அழைத்து வாருங்கள் என்றது.
ஆடுகளை ஒரு அறையிலும்
நாய்களை ஒரு அறையிலும் 
பூட்டி வைத்தது நரி.

அரை மணிநேரம் கழித்து அறை திறக்கப்பட்டது.
ஆடுகள் அனைத்தும் அமைதியாக வரிசையாக அந்த அறையை விட்டு வெளியே வந்தன.
நாய்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று கடித்துக் குதறி ரத்தம் ஒழுக வெளியே வந்தன.
" இப்போது புரிந்ததா?" என்று கேட்டது நரி. நடுங்கியபடியே , " புரிந்தது" என்றது நாய்.

" உன் இனம் பெரிதுதான். ஆனால் நீ உனக்குள் அடித்துக் கொள்கிறாய். கடித்துக் கொள்கிறாய்" என்றது நரி.

நரி சொன்னது நாய்க்கு மட்டும் தான்!

_ தமிழ்நாடு  நாட்டுப்புறக் கதை

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...