Monday, May 28, 2018

ஸ்டெர்லைட் மூடியது மூடியது தான்

ஸ்டெர்லைட் மூடியது மூடியது தான் 
பட்டினத்தார் பாடல் போல் மீண்டும் தலை எடுக்க  கூடாது. 
————————————————-

இன்றைய அரசு உத்தரவு நூறு நாட்களுக்கு பின்னர் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மூன்கூட்டியே அரசானை வெளியிட்டு இருந்தால் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம். 






மூடியது மூடியதாகவே இருக்க வேண்டும்..

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
*
இந்த பட்டினத்தார் பாடல் போல் மீண்டும் ஸ்டெர்லைட் தலை எடுக்க  கூடாது. 

ஆலை நிர்வாகம்,  சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை நீதிமன்றத்திற்கோ அல்லது உச்சநீதி மன்றத்தையோ நாடலாம். ஆனால் அதற்கு முன்னதாக தூத்துக்குடி சுற்றிலும் உள்ள கிராமநிர்வாகம் ( கிராம சபைகள்) அழுத்தமான தீர்மானத்தை நிறைவேற்றினால் அது வழக்குக்கு வலுவாக அமையும்.  இந்த அரசு அக்கறையுடன் செயல்பட்டு கிராமசபைகளை அனுகி செயல்பட வேண்டும். 

காவிரி  வழக்கு போலாகிவிடக் கூடாது. 

#ஸ்டெர்லைட்ஆலை 
#ஸ்டெர்லைட்அரசானை
#பட்டினத்தார்பாடல் 
#KSRadhakrishnanpostings 
#kSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
28-05-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...