திலகர் - பயங்கரவாதத்தின் தந்தையா...
--------------------

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று இருந்தார்கள். ஒரு பக்கம் நேதாஜி ஐ.என்.ஏ படை யை அமைத்தார். பகத்சிங் நாட்டு நலன் கருதி தீவிரவாதத்தை கையிலெடுத்தார். தமிழகத்தில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதி போன்றோர் திலகரின் தீவிரவாத அணுகுமுறையை ஆதரித்தனர். வ.உ.சிக்கு சுதேசிக் கப்பலை பம்பாயில் வாங்க உதவியவர் திலகர். உத்தமர் காந்திக்கே ஆதர்சமாக விடுதலை போராட்ட குணத்திற்கு முன்னோடியாக விளங்கியவர் திலகர் என்று அவரே சொல்லியுள்ளார். இப்படிபட்டவரை தவறாக பயங்கரவாதத்தின் தந்தை என்று பாடப்புத்தகங்களில் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல.
#பாலகங்காதரதிலகர்
#Bala_Gangadara_Thilak
#இந்தியவிடுதலைப்போராட்டம்
#Indian_Freedom_Movement
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-05-2018
No comments:
Post a Comment