Sunday, May 27, 2018

அழகர் அணை

அழகர் அணை:
————————
இன்று (27-05-2018) வரகுணராமபுரம் தம்பி கார்த்திக் – ரூபா ஆகியோர் திருமணம் இராஜபாளையத்தில் நடத்தி வைத்தேன்.

இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் பகுதி பயனடையும் அழகர் அணைத் திட்ட எனது நூலை இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.பி.ராஜன் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி. அழகிரிசாமி பெற்றுக் கொண்டார். இந்த திருமண நிகழ்வில் ஆண்டாள் கோவில் தக்கார் கே. இரவிச்சந்திரன்,விருதுநகர்  மாவட்ட காங்கிரஸ் ராஜா சொக்கர் வி.பி.ஆர். இளம்பரிதி, ஆ. பழனிச்சாமி போன்ற பலரும் கலந்து கொண்டனர். அழகர் அணை திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பயன்படும் என்று 1960களில் பேசப்பட்டும் இன்னும் நிறைவேறவில்லை. 

அழகர் அணை குறித்து விருதுநகர் பெ. சீனிவாசனுடன் நானும் சந்தித்து அன்றைய முதல்வர் கலைஞரிடம் கொடுத்தோம். அந்த மனுவும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது. அழகர் அணையை குறித்து அனைத்து விவரங்களையும் இந்த நூலில் தொகுத்துள்ளேன். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, இதற்கு கடமையும் ஆற்றவேண்டும். 
ஏற்கனவே அழகர் அணை திட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளேன்.
#அழகர்அணை
#விருதுநகர்மாவட்டம்
#algardam
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2018

http://www.dinamani.com/editorial_articles/2016/jun/17/அழகர்-அணை-திட்டம்-எப்போது-2278--1.html




No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...