Thursday, May 31, 2018

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூடத்தின் அவல நிலை.



தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை பறைசாற்றும் தாமிரபரணி கரையில் அமைந்த ஆதிச்சநல்லூர் தமிழகத்தின் அடையாளமாகும். இன்றைய இந்த புண்ணிய பூமி தமிழருடைய வரலாற்றையும், தொன்மையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுக்களமாகும். இங்கு கிடைத்த முதுமக்கள் தாழியை பாதுக்காக்க 20 லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு அரங்கம் கட்டப்பட்டது. ஆனால் அந்த அரங்கத்தில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு உரிய உதவியையும், கவனத்தையும் மேற்கொள்வதில்லை.
பாராமுகமாக உள்ள இந்த அகழ்வாராய்ச்சி பணியில் ஏதோ மாதிரி கட்டப்பட்ட கட்டிடத்தில் கூட பொறுப்புணர்வு இல்லாமல் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அந்த காட்சி அரங்கத்திலேயே வீசிவிட்டு செல்லும் அற்பர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
#ஆதிச்சநல்லூர்
#Adichanallur
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2018


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...