Saturday, May 26, 2018

Book on Dravidian years.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் (OUP)  எஸ். நாராயண் எழுதிய Dravidian Years  - Politics and Welfare of Tamil Nadu என்ற ஆங்கில நூல் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த நூலில் ஆங்கிலத்தில் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் அரசியலையும், ஆட்சிகளை பற்றியும் எழுதப்பட்டிருப்பதாக தகவல். 
இதன் அட்டைப் படத்தை பார்த்தாலே புத்தகம் எழுதியவர் எப்படி எழுதியிருப்பார் என்று சிந்தித்தபொழுது, சரியான  பார்வையிலும், அணுகுமுறையிலும் எழுதப்பட்டிருக்குமா என்று ஐயம் ஏற்படுகிறது. 
பெரியார், அண்ணா ஆகியோருடைய படங்கள் அட்டைப் படத்தில் இல்லை. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான கலைஞரின் படத்தை மேலே வைக்காமல் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையில் புகுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நீண்ட காலமாக திராவிட இயக்கத்தை தமிழகத்தில் வழிநடத்தி தலைமை தாங்கிவரும் தலைவர் கலைஞரை இப்படி அட்டை படத்தில் காட்டப்பட்டிருப்பது சரிதானா?

இந்த நூலில் பல்வேறு தவறான விமர்சனங்களும் இருப்பதாகவும் டெல்லி நண்பர்கள் மூலமாக அறிந்தேன். புத்தகம் வெளிவரட்டும் பார்க்கலாம்.

#திராவிட_அரசியல்
#Book_on_Dravidian_years
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2018

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...