Friday, June 22, 2018

வெள்ளந்தி மனுஷி.

அருப்புக்கோட்டையிலயிருந்து மதுரை பஸ்ல ஏறினேன்.கடைசி சீட்ல தான் ஓரிரு இடம் இருந்தது.அதிலும் மூலையில் ஒரு பொம்பள உட்கார்ந்து இருந்தது.

ஏம்மா முன்னால ஒரு பொம்பள மட்டும்
தனியா உக்காந்திருக்கு சேர்ந்து உட்காரலமே.நீங்க ஒரு ஆளு இங்க உக்கார்றதால மத்த ஆம்பளக உட்கார்றது சிரமமில்ல.முன்னாள போங்க நாங்க 
சலாத்த உட்கார்ந்து வாரோம்.பின் சீட்ல
தூக்கி தூக்கி வேற போடும் ஆள.

சும்மா இப்படித் தான் சேர்ந்தே 
உக்காருங்க.இந்த சீட்டுக்கு அடியில
கூடைய வச்சிருக்கேன்.காரியாபட்டி
வந்தா எடுத்துட்டு எறங்க அது தான் தோது.

"சும்மா உட்காருங்க சார்."

"சரின்னு உக்காந்தாச்சி."

"சீட்டுக்கு கீழே பாத்தேன் அலுமினியக்கூடை வெத்துக்கூடை இருந்துச்சி."

"ஏம்மா. என்ன யேவாரம்."

"வெள்ளரி பிஞ்சு யேவாரம்."

"மார்க்கெட்லய போட்டு வாரே."

"இல்லை. காந்தி நகர் பக்கம் போய்
தெருவில வச்சி வித்து வாரேன்."

"இந்தக் கூடையில தானா.எத்தனை கிலோ கொண்டாந்தே."

" கெலோ கணக்கெல்லாம்   இல்ல.எழநூறு
பிஞ்சு தேறும்.எண்ணிக்கை கணக்கு தான்."

"எழுநூறு பிஞ்சுன்னா மனசுக்குள்ளயே ஒரு கணக்கு போட்டேன் பிஞ்சு ஒன்னு அம்பது கிராம்னாலும் முப்பத்தஞ்சு கிலோ இருக்குமே.ஆமா நெருக்கி முப்பந்தஞ்சி நாப்பது கிலோ தேறுமில்ல."

"நாப்பது கெலோவுக்கு கொறையாது."

"என்ன ஒரு ரெண்டாயிரம் ரூபாய்க்கு
வித்து தேத்துருப்பியா."

"அவ்வளவெல்லாம் வராது ஆயிரத்து முந்நூறு இல்ல ஆயிரத்து நானுறு தேறும். பத்து ரூபாய்க்கு சிறுசும் பெருசுமா அஞ்சு 
பிஞ்சு கொடுப்போம்.அப்ப கணக்கு போட்டுக்கங்க. நாஞ்சொல்றது சரியா வரும்.வந்து போற செலவு பஸ்சுக்கு லக்கேஜ் காப்பித்தண்ணிக்குன்னு எறநூறு ரூபா செலவு வந்துரும்.அது போக மீதி ஆயிரத்து நூறு ரூவா தேறும்".

"பிஞ்சு காட்டுல போய் வாங்கியாரதா."

"அடுத்தாளுகிட்ட வாங்கியாரதுல்ல எங்க
வயக்காட்டு பிஞ்சு தான்."

"எந்நேரம் வயக்காட்டுக்கு போனீக. பிஞ்சொடிக்க எம்புட்டு நேரமாச்சு."

"ஏம் இந்தாளு இம்புட்டு கேள்வி கேக்கான்னு நெனச்சி கழுத்த சைஸா தூக்கி ஓரப்பார்வை பாக்க பார்வையிலயே தெரிஞ்சி போச்சி அதோட சந்தேகம். "

"என்னா சைசா அப்படி பாக்குறே.நானும்
சம்சாரி வீட்டு பிள்ளை தான்.ஒன்ன
மாதிரி நானும் வெண்டைக்கா,
கத்தரிக்கா பறிச்சி,தண்ணி கிண்ணி பாச்சி திரிஞ்சு வந்தவன் தான்.வெள்ளரி பிஞ்சு வெள்ளாமை எப்புடி இருக்குன்னு தெரிஞ்சிக்கத்தான் கேக்கேன்."

"அப்புடியா.எந்தூரு ஒங்களுக்கு."

"சொந்த ஊரு சீல்த்தூரு.இப்பம்
மதுரையில கெடக்கேன்."

"ஆ..ங்"

"ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில
இப்ப சொல்லுச்சு அந்தம்மா."

"பிஞ்சொடிக்க ஆளு கூப்புட்டு போனா
அவுகளுக்கு சம்பளம் நூறு ரூபா.ஆறு
மணிக்கு வருவாக எட்டரை மணிக்கு
பிஞ்சொடிச்சி முடிஞ்சி போகும்.அந்த
எடத்துலயே எண்ணி வைக்கனும் நூறு
ரூபாய.அப்படி ஆள கூட்டி போயி வேலை
பாக்குற ஆளுகளும் இருக்காக.நாங்க
எங்கூட்டாளுக தே மூனு பேரு போவோம் 
எட்டரை மணிக்குள்ள ஐநூறு பிஞ்சிலிருந்து எழநூறு பிஞ்சு ஒடிச்சிருவோம்.நானே கொண்டு போய்
வித்தாரேன்.இப்பம் மணி என்னாச்சு".

"மணி நாலேகாலாச்சி.சரி வெள்ளரி பிஞ்சு கம்மாக்காட்டுல போட்டுருக்கீகளா. வயக்காட்டுல போட்டுருக்கீகளா."

"கம்மாக்காட்ல எங்க தண்ணி கெடக்கு.
எங்க சொந்த வய்யல தான்  போட்டுருக்கோம். நாப்பது சென்ட்டுக்கு
போட்ருக்கோம்.தண்ணி அம்புட்டு தான்
பாயும்.எட்டு நாளைக்கொரு தண்ணி விடோனும்."

"நாப்பது சென்ட்டுக்கு எத்தனை செடி வரும்."

"அதெல்லாம் கணக்கு தெரியல. ஒரொரு
எட்டுக்கு (காலடி தூரம்) ஒரு செடி. வரிசைக்கு வரிசையும் ஒரெட்டு தான்.
எங்க காட்ல எடுத்து வச்ச வெதைதான்.
வெதச்சி மொளைச்சி பதினஞ்சு நாளைக்கு பின்னால ஒரே ஒரு தடவ
தான் ஒரம் வப்போம்.நாப்பதாவது நாள்ல
இருந்து பிஞ்சொடிப்போம்.அதுல இருந்து
எம்பது, தொண்ணூறு நாளைக்கு பிஞ்சொடிப்போம்.ஐநூறு எண்ணிக்கைக்கு கொறையாது தெனம்.வாரத்துக்கொரு
மருந்தடிப்போம்.இல்லைன்னா பூச்சி,
புழு வந்துரும்.எங்க காரியாபட்டி பக்கம் வெளையுற பிஞ்சு ருசியே தனி வேற எங்கெயும் இது மாதிரி ருசி இராது.அது இந்த மண்ணுவாசி  ஆமா."

அடுத்த கேள்விக்கு வேலையில்லாம
மொத்த கேள்விக்கும் கேக்காமலயே
பதில சொல்லி முடிச்சிடுச்சி.

"ஒனக்கு அப்ப காரியாபட்டியே தானா."

"இல்ல எங்கூரு மந்திரி ஓடை பக்கத்துல கெழக்கே அஞ்சி மைல் போகனும்.காரியாபட்டில எறங்கி வேற
பஸ்ல இல்லன்னா ஆட்டோல போகனும்.
வாங்க எங்கூருக்கு சாப்டு போகலாம்".

நான் சிரிச்சிக்கிட்டே வாரேன். இன்னொரு நாளைக்கி வெசாரிச்சாதாவது வந்துற மாட்டேன்.

"வாங்க. வாங்க."

"சரி ஒங்க புள்ளைகளெல்லாம் என்ன
பண்ணுதுக."

"எனக்கு ஆம்பள புள்ள இல்ல.ரெண்டும்
பொம்பள புள்ள தான். ரெண்டையும்
கட்டிக்கொடுத்தாச்சி.மூத்தது சென்னையில இருக்கு.எளையது
லவ்வு பண்ணி ஒரு போல்ஸ (போலீஸ)  கட்டிக்கிச்சி.அந்த தம்பி ஒரு ஆக்சன்ட்ல
எறந்து போச்சி.ஒரு வர்ஷம் மேல ஆச்சி.
இப்பத்தான் திரும்ப திருநெல்வேலி
பக்கம் கட்டிக்கொடுத்திருக்கேன்.
எல்லாரும் நல்லா இருக்காக ஆண்டவன்
புண்ணியத்துல."

"ஒன்னைய பாத்தா அப்படித்தெரியலயே ரெண்டு புள்ளைய பெத்து புள்ளைகல கட்டி கொடுத்தவ மாதிரி.அய்யோ சிரிப்பும் வெக்கமும்.ஆமா அம்புட்டு எளமைன்னு நான் சொல்லாம சொல்லிட்டேனாம்.பரவாயில்லை பொண்ணுக்கு திரும்ப கல்யாணம் பண்ணி வச்சது உருப்படியான வேலை.
இதுல படிச்சவங்க கூட கூருல்லாம
இருக்க நீங்க பரவாயில்லை.

"காரியாபட்டி வந்துருச்சி.கூடையெடுத்து
இறங்காத்தா".

வாங்க எறங்குங்க.காப்பித் தண்ணி 
சாப்புட்டு போகலாம்.

ஆமா.நான் டிக்கெட் மதுரைக்கு போட்டுருக்கேன்.இங்க எறங்குனா திரும்ப டிக்கெட்டுக்கு காசு.

"ஆமா லட்சம் ரூவா இவுக."

"இன்னொரு நாளைக்கு
பாக்கமால போகப்போறேன்.சந்தோஷமா
போயிட்டு வாத்தா."

சிரிச்சிக்கிட்டே எறங்கி போனது அந்த 

 த்தனை கேள்வி கேட்டேனே.அந்த பொம்பள பேரைக் கேட்டேனா பாவத்தை.நான் ஒரு கூரு கெட்டவன்.கேக்கவே இல்லியே.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...