ஜெயா அருணாசலமும், படையப்பாவும்.
--------------
ஜெயா அருணாசலம் மறைவு செய்தி செய்தித்தாள்களில் வந்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் தணிக்கைக்கு வந்தபோது அந்த திரைப்படத்தில் ‘நீலாம்பரி’ என்ற கதாப்பாத்திரம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒத்துள்ளது. எனவே இதற்கு சான்றிதழ் வழங்கமுடியாது என்றார். நான் ஏன் வழங்கமுடியாது? என்றும், அதை மறுத்து தணிக்கைகுழு சான்றிதழ் வழங்கலாமே என்று வாதிட்டேன். அப்போது சக தணிக்கை குழு உறுப்பினர்கள் எனது கருத்தை ஆதரித்ததால் என்னுடைய வாதத்தை ஏற்றுக் கொண்டு படையப்பா திரைப்படத்திற்கு சான்றிதழ் கிடைத்தது. இல்லையென்றால் குறித்த காலத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் திரைக்கு வந்திருக்காது. இதுபற்றி அன்றைக்கு தினமலர் நாளிதழ்கூட செய்தி வெளியிட்டிருந்தது.
ஜெயா அருணாசலம் ஒரு நல்ல பண்பாளர். பி.ஏ. எக்கானமிக்ஸ் படித்தவர். காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பீகார் முதல்வராக இருந்த பகவத் ஜா ஆசாத்திற்கு சம்மந்தியுமாவார். அவருக்கு பன்முகத்தன்மைகள் கொண்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2019
No comments:
Post a Comment