Tuesday, May 8, 2018

காவேரியும் திப்பு சுல்தானும்

திப்பு சுல்தான் மைசூரை ஆட்சி செய்த போது​ திப்புவின் கவர்னரில் ஒருவர் தமிழகத்தின் கீழ்பவானிக்கு செல்லும் காவேரி நீரை தடுத்து தடுப்பணையை கட்டினார்.

இதில் பாதிப்படைந்த கீழ்பவானி விவசாயிகள் திப்புவிடம் நேரில் முறையிட்டனர். அப்போது திப்பு சொன்னது, "சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை மேலிருந்து கீழ்செல்லும் தண்ணீரை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை" என்று தடுப்பணையை உடைத்தெரிந்தார்.

............

நியூசிலாந்தில் முதல் சூரியோதயம் நிகழ்வதால் சூரியன் அந்த நாட்டிற்க்கு தான் சொந்தம் என்று கூறுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அவ்வளவு முட்டாள்தனம் தலைக்காவிரியில் உற்பத்தி ஆவதால் காவிரியை கர்நாடகா சொந்தம் கொண்டாடுவது.

#காவேரி 
#திப்பு_சுல்தான்.
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-05-2018

No comments:

Post a Comment