Tuesday, May 29, 2018

கரிசல் காடுகளில் நடைபாதை.....

கரிசல் காடுகளில் நடைபாதை ஓர பயிர்களின் சேதம் தவிர்க்க பாதுகாப்புக்காக விதைக்கப்பட்டு இருபுறமும் ஆளுயுயரத்துக்கு மேல் ஓங்கி வளர்ந்த நாத்துச்சோள சோகைகளின் தாலாட்டோடு 
அந்த ஒற்றையடி பாதையில் நீண்ட தூரம்
நடந்தும்,மிதி வண்டியிலும் சென்று 
திரும்பிய அனுபவம் எனக்கு மீண்டும் கிட்டுமா என்ற ஏக்கம் என் வயதை ஒத்த கிராமவாசிகளின் மனதில் தொக்கியே நிற்கும்.என்றும் நிற்கும்.

இதே ஒற்றையடிப்பாதைகளில் மழைக்
கால அனுபவம் கூடுதல் இனிமை.ஆமாம்
செருப்பணியாத கால்களோடு நடந்து வரும் பொழுது வலதும்,இடதும் கால்கள் வழுக்க அந்த சேறு உடைகளில் படாமல் இருக்க இரு 
கைகளால் சேலை தூக்கி பெண்கள் நடப்பது பார்க்க அழகாய் ஏதோ நடனமாடி வருவது போலவும்,களக்கூத்தாடிகள் கயிற்றின் மேல் நடந்து வருவது போலவும் இருக்கும் அந்த காட்சி. 

இது போல் ஒரு காட்சிகள் இனி கண்ணில் காண்பதரிது.

No comments:

Post a Comment