Wednesday, May 16, 2018

சித்தராமையாதோல்வி #அரசியல்பாடம்

கர்நாடக தேர்தலில் சித்தராமைய்யாவின் தோல்வி அரசியல் இயக்கங்களுக்கு  ஒரு பாடத்தை உணர்த்துகின்றது. 

தனக்கு பெரும் துணையாக, உண்மையாகவும்  இருந்த தன் சகாக்களை புறக்கணித்து , பாசாங்கு செய்பவர்களை, போலிகளை அங்கிகரித்து பக்கத்தில் வைத்துக் கொண்டு அரசியல் பணிக்கு கிடைத்த தண்டனை. 

விதிவசம் பாருங்கள். தேவேகவுடா குமாரசாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அவரின் நம்பிக்கையாக இருந்த சித்தராமையா  10 ஆண்டுகளுக்கு முன் மஜதவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து முதலமைச்சரானார். 

இதே சித்தராமையாவே இப்போது குமாரசாமி முதல்வராவதற்கு ஆதரவு தெரிவிக்கிறார். காட்சிகள் மாறுகிறது.

#கர்நாடகம்
#சித்தராமையாதோல்வி 
#அரசியல்பாடம்
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-05-2018


No comments:

Post a Comment