Monday, May 14, 2018

காவிரி-பேரு பெரிய பேரு, தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை

காவிரி-பேரு பெரிய பேரு, தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை
----------------------------------
காவிரியில், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைப்பு மாதிரிதான் சரியாக இருக்கும். அதை கைவிட்டுவிட்டு குழப்பமான சில அறிவிப்புகளை செய்வது காவிரியின் கடைமடை மாநிலங்களான தமிழகம், புதுவை, கேரளம் ஆகியவற்றிற்கு தேவைக்கேற்ப காவிரி நீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். 
அமையவிருக்கும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் தான் என்பது எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படும். 
காவிரி வரும். ஆனால் வராது என்ற நிலையில் சித்து விளையாட்டுகளை டெல்லி பாதுஷாக்கள் செய்துவிட்டார்கள். ஏதோ செய்தோம் என்று பொய்யான நம்பிக்கையை ஊட்டக் கூடியது தான் இன்றைய மத்திய அரசின் அறிவிப்புகள்.
பேரு பெத்த பேரு. தாக நீலு லேது.
பேரு பெரிய பேரு, ஆனா தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை

No comments:

Post a Comment