Saturday, September 22, 2018

மனிதர்கள் முக்கியம்....

மனிதர்கள் முக்கியம். நல்ல மனிதர்கள் முக்கியம். பொருட்கள் எங்கும் உண்டு. மனிதர்கள் கிடைப்பது தான் சிரமம். நல்ல மனிதர்கள் அண்மை முக்கியம் 

அழுகை என்பது ஒரு சிறிய விடுதலை வடிகால் வடிந்த பிறகு மனசு லேசாகும். வாஸ்தவம். மனசு லேசான பிறகு விரக்தி தான் எஞ்சும். 
நம் கையில் என்ன இருக்கிறது ? எல்லாம் கடவுள் செயல் என்று அயர்ந்து போகும் நடவடிக்கைகளில் முனைப்பு போகும். தீவிரம் அழியும்.

யுத்தம் தீர்மானித்தவர்கள் அழுவதில்லை. போர்க்களம் வந்துவிட்டவர்கள் புலம்புவதில்லை. துக்கத்தை அழுகையாய் மாற்றிக் கரைப்பதை விட உறைய வைத்து நெஞ்சில் நிறுத்திக் கொள்வது உத்தமம்.

 உலகத்தோடு ஆடு . திரும்பத்திரும்ப திரும்ப உள்ளே கிட. எப்போதோ ஏதோ ஒன்று ஜெயிக்கும். நீயோ அல்லது உலகியலோ. எப்போது எது ஜெயிக்கும். பிரம்ம ரகசியம். கர்மா.இதனால்தான் பலனை எதிர்பார்க்காதே என்றார்கள்

- பாலகுமாரன்மன்

தோள் கொடுக்க தோழனும் ,
தோள் சாய தோழியும் 
கிடைத்தால்
வரமே..!
மகிழ்வுகளில் மிதந்திருக்கிறேன்...  நேசங்களால் நிறைந்திருக்கிறேன்... வலிகளில் வாடியிருக்கிறேன்..., வேதனைகளில் விம்மியிருக்கிறேன்...  பிரியமெனும் பெயரால்  ஏமாற்றப்பட்டிருக்கிறேன்...
குற்றமற்றும் பழிச்சொல் சுமந்திருக்கிறேன்... 
மன உறுதியுடன் நின்றேன்...
துணிவுடன் நின்றேன்....
குறிக்கோளுடன் நின்றேன்...
தவறு செய்ய வில்லை என்ற தலைக்கேறிய
திமிருடனும் இருந்தேன்...
வழியும் கண்ணீரை மறைத்து சிரிக்கப் பழகினேன்.. 
வேடம் கட்டியவர்களை
விலக்கி நடந்தேன்...
பாசம் காட்டியவர்களை  அணைத்தேன்... 
எனக்கென ஓர் உலகமும்  அமைத்தேன்... 
என்னை முதுகில் குத்தியவர்களுக்கும் நிறைய....

நிறைவாக அத்தனையையும்  அனுபவித்து விட்டேன்...
வயதுக்கு மீறிய பாரங்கள் சுமந்த காயங்களின் தழும்புகள் மறைய மறுக்கிறது...
ஆனால் இப்போதும் சிரித்துக் கொண்டிருக்க மறப்பதில்லை... 
ஏனோ சற்று அலுப்பும் தட்டுகிறது...


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...