Sunday, September 30, 2018

யாழ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் நலன் குறித்து பேச்சு.

யாழ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழ மக்கள் நலன் குறித்து பேச்சு.
நேற்று 27-09-2018 மாலை யாழ்ப்பாணம் ஹெரிட்டேஜ் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பு சேனாதிராஜா தலைமையில் நடந்தது. அவ்வமயம் இன்றைய ஈழமக்களின் அவசிய தேவைகள் என்ன என்பதுக் குறித்து பேசினோம்.
விவாசாய நிலங்களை மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இறுதிப்போரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
போரில் கனவனை இழந்த விதவைகள் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச விசாரணை பொய்த்து போகும் பட்சத்தில் அதற்காக மேற்கொண்ட பத்து ஆண்டுகால உழைப்பு விரயமாகிவிடும்.
இந்த சந்திப்பும் கலந்தாலோசனையும் இலங்கைவாழ் தமிழ் மக்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களிடத்தில் நம்பிக்கை துளிர்க்கின்றது. இந்த பயணத்தில் எனக்கும் மிகுந்த மனநிறைவை அளித்த சந்திப்பு என்றால் மிகையல்ல.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
28-09-2018
#சேனாதிராஜா
#யாழ்ப்பாணம்சந்திப்பு
#KSRadhakrishnanpostings
#KSRPostings

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...