Tuesday, December 17, 2019

மாதங்களில் நான் #மார்கழி என்கிறான் கண்ணன்...... மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்.......




பெருங்கோயிலுடையானுக்கு திருத்தொண்டு புரிந்து வந்த பெரியாழ்வாருக்கு துளசி வனத்தில் கிடைத்தப்பெண் கோதை ஆண்டாள்.

ஆண்டாள் பறை வேண்டுமெனக் கேட்கிறாள் , அனைத்தும் அவளது உணர்வாக  , பாடல்களாக.. இந்த மார்கழியில் பாவையின் விடியல் எழுச்சி கீதங்கள்......

கோதையாண்டாள்  தமிழையும்..ஆண்டாள் !

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
****

மார்கழி-திருப்பாவை
--------------------
மாதங்களில் நான் மார்கழி....

மார்கழி நீராடி மாலனருள் பெற்றுறிடவே
சீரார்நம் ஆண்டாள்தான் செப்பியதை - ஆர்வமிகக் 
கற்றுணர்ந்து நின்றிட்டால் கன்னித் தமிழ்ச்சுவையும்
சுற்றிவந்து சுகம் நல்கும்......
கோதை ஆண்டாள்!
தமிழைஆண்டாள்!!

(படம்-திருவில்லிபுத்தூர் கோபுரம்)

#ஆண்டாள்
#மார்கழி
#திருவில்லிபுத்தூர்
#andal

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
17-12-2019

No comments:

Post a Comment