Tuesday, December 24, 2019

மக்களால்_ஆட்சிகள்_மாறினாலும், #காலநேர_வர்த்தமானிகள்_மாறினாலும்,

#மக்களால்_ஆட்சிகள்_மாறினாலும், #காலநேர_வர்த்தமானிகள்_மாறினாலும், #சூழல்களும்_மாறினாலும்,#இப்படியான #காட்டுமிராண்டித்தனமான............
————————————————
பெங்களூரு நகரில் நாடறிந்த எழுத்தாளுமை மிகுந்தவரான ராமச்சந்திர குஹாவை குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கர்நாடக காவல்துறை அடிப்படை நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்ட விதத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது.

அதைப் பார்த்தபோது, 1980களில் துவக்கத்தில் மதுரையில் ஜஸ்டிஸ் தார்குண்டே காவல்துறையினரால் தாக்கப்பட்ட கொடுமையான காட்சி தான் நினைவுக்கு வந்தது. ஜஸ்டிஸ் தார்கொண்டே அவர்களை  தமிழ்நாடு காவல்துறை லத்தியால் அடிக்கப் போகும்போது தடுக்க நினைத்த என்னைப் போன்றவர்கள் எல்லாம் இதைப் பார்த்து வேதனை அடைந்தனர்.

குஹாவை மீது ஏனிந்த தாக்குதல்கள்? ஒரு பிரச்சினையில் பலருக்கும்  கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் இப்படியா....?

மக்களால் ஆட்சிகள் மாறினாலும், காலநேர வர்த்தமானிகள் மாறினாலும், சூழல்களும் மாறினாலும்,இப்படியான காட்டுமிராண்டித்தனமான காவல்துறையின் அணுகுமுறை மட்டும் மாறாமல் இருப்பது, வேதனை தருவதோடு மட்டுமில்லாமல், நாம் அடிப்படையில் முன்னேறவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

#ராமச்சந்திர_குஹா

#ஜஸ்டிஸ்_தார்குண்டே

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.12.2019
#ksrposts
#ksradhakrishnanposts


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...