Tuesday, December 31, 2019

ஆங்கில வருடத்தின் இறுதி நாளன்று.....



————————————————-
வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து 
கொள்ளும் போது தான், வாழ்க்கையில்
நமக்கு பிடிப்பு உண்டாகும், வாழ்வதன்
தேவையும்  நமக்கெல்லாம் புரிய வரும்....
வாழும் போதே மகிழ்ச்சியாய் வாழ்ந்து
விடுங்கள், ஏனெனில் இங்கு மறு ஒத்திகைகள் கிடையாது.

*******
சேறென்று தெரிஞ்சதால் 
மிதிக்காது ஒதுங்கினலும்....
ஒதுங்கிய கால்களின் சில இடங்களை சில சேறுகள் வலிந்து ஒட்டிக்கொள்ளகின்றன.....
அது போலவே கவலைகள,ஆற்றாமை,
வேதனைகள் எவ்வளவு வல்லமை இருந்தாலும் காரணம் இல்லாமல் வந்து  நிலைக்குலைய 
செய்கிறது.
ஆனால் இதுவும கடந்து விடும். 
 
*******
ஆட்சி அதிகார வர்க்கம் என எல்லா இடங்களிலும் தான்..
எல்லாம் கையில் இருக்குன்னு
திறமையானவங்களை கொண்டாட
தெரியாமல் தொலைச்சுட்டு;
ஆட்சியோ,வேலையோ, தொழிலோ
நேர்த்தியா இருக்கணும்னு
எதிர்பார்த்தா எப்படீ..? எந்த போராட்டம் நடத்தி என்ன பலாபலன்?

*****
அடி, உதை, தாக்கு,வெட்டு என்பதை கோஷமாக்குபவர்கள்,
கற்க, நல்லதை தேடு
என்பதையும் கோஷமாக்க 
ஏன் தவறி விட்டார்கள்?

#KSRadhakrishnanpostings 
#KSRPostings

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
31/12/2019

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...