Tuesday, March 24, 2020

#உப்பு_பற்றி_கிரா.



————————
“உப்பை உப்பு என்று சொன்னால் அது கோபித்துக் கொள்ளுமாம்; சரியாகவே அமையாதாம்! அதனால்தான் ருசிக்கல்லு என்று சொல்லுகிறதாம்.
பானக்கரமும் நீர்மோரும் இல்லாத சிறீராமநவமியே கிடையாது. பானக்கரம் இல்லாத நைனார் நோம்பும் கிடையாது.
கோடையில் பிறந்தான் ராமன்; ஆடையில் பிறந்தான் கண்ணன் என்பது சொலவடை (ஆடை என்பது மழை).
கோடையில் தாகத்துக்குத் தண்ணீர் தருவதைவிடப் பானங்கள் தருவது ரொம்ப விசேடம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, ‘மோரு தந்தா மூணு ஜென்மத்துக்கு அடிமை, இளநீர் தந்தா ஏழு ஜென்மத்துக்கு அடிமை’ என்று சொல்லப்பட்டு இருக்காம்.
இதில், குடித்தவர் அடிமையா கொடுத்தவர் அடிமையா என்பது பக்கத்திலுள்ள பெரியாட்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது.” (லீலை, 2016: 142).

#ksrpost
24-3-2020.

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…