Saturday, March 28, 2020

தென் மாவட்டங்களில் அந்த கால கட்டுமான வீடுகள்...

What's on your mind...


இந்தப் பாணியில் அமைக்கப்பட்ட வீடுகளின் உள்ளே வெப்பநிலை ஒரே சீராக இருக்கும். இவை சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து அரைத்து கட்டப்பட்டதாகும். வெயில் நேரத்தில் குளிராகவும், மழை, பனி நேரத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.

சிறந்த அறிவியல் ரீதியான கட்டிட அமைப்பு.

சுவரின் கனம் 1.5 அடி கொண்டதாகவும், உயரம் குறைந்த வாயிற்படிகளையும், நல்ல காற்றோட்ட வசதியும் கொண்டு அமைக்கப்பட்டவை.

வசதி குறைந்தவர்கள் நாளி ஓடு என்ற வகை ஓடுகளை கூரையாக அமைத்திருப்பார்கள். மூன்று அடுக்கு ஓடுகள் அடுக்கப்பட்டிருக்கும். சுற்றிலும் மண் சுவர் தான் இருக்கும். அந்த அமைப்பிலும் வெப்பநிலை ஒரே சீராகவே இருக்கும்.

அன்று வீடுகளின் தளங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்களுக்கு இணையாக வேறு எந்த வித இயற்கை மற்றும் செயற்கை கற்கள் எதுவும் இல்லை.

பழந்தமிழரின் கட்டடக்கலை போற்றுதலுக்குரியது.போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

Pic:Thanks to Shobhna 
#ksrpost
28-3-2020.

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்