Friday, March 27, 2020

சென்னை_கல்கத்தா_நகரங்களைச் #சேர்ந்த_பாரம்பரியக்_கட்டிடங்கள்

#சென்னை_கல்கத்தா_நகரங்களைச் #சேர்ந்த_பாரம்பரியக்_கட்டிடங்கள்.
———————————————-
இங்கு கீழே காட்டப்பட்ட இரண்டு படங்கள் சென்னை, கல்கத்தா நகரங்களைச் சேர்ந்த பாரம்பரியக் கட்டிடங்கள். இந்தக் கட்டிடங்களைப் படத்தின்  மூலம்  பார்த்தால் பராமரிப்பில்லாமல் கிடப்பதைப் பார்க்கலாம்.சென்னை சட்டக் கல்லூரி சிவப்பு கோபுரங்களில் தேவையற்ற செடிகள் வளர்ந்திருப்பதை கடந்த 5 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இப்போது அங்கு கல்லூரி இயங்கவில்லை. இது குறித்து 2016இல் சட்டக் கல்லூரி முதல்வரிடமே நேரில் சந்தித்து சொல்லியும் தேவையில்லாத செடிகளை இதுவரை அகற்றவில்லை.
சென்னை தலைமைச்செயலகத்தின் அருகில் கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் இதுமாதிரி செடிகள் வளர்ந்துள்ளன. சென்னை அண்னா மேம்பாலத்திலும் இதே நிலைமைதான். இது குறித்தான பதிவைக் கூட சமூக வலைத்தளத்தில் பதிந்திருந்தேன்.கல்கத்தா பாரம்பரியமான நகரம் அந்த நகரத்தின் பிரதான சாலையிலேயே உள்ள பழைய கட்டிடத்தில் இப்படி செடிகள் வளர்ந்துள்ளன. இதையும் பார்த்துக்கொண்டு தினமும் லட்சக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர்.







#சென்னை_கல்கத்தா_நகர_பாரம்பரிய #கட்டிடங்கள்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27.03.2020
#ksrposts

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...