Friday, November 27, 2020

 #கரோனா

#திருநெல்வேலி_பேச்சு_வழக்கில்.... (நெல்லையப்பர் கோவில் அருகே)

#ஒட்டுவாரொட்டி #வெசக்குடுநி . #தடுமம்
————————————————
ஏல எசக்கி ...
இந்த கரோனா கிருமி ரொம்ப மோசமானது டே.
அது ஒரு #ஒட்டுவாரொட்டி. ஒருத்தருகிட்ட இருந்து
இன்னொருத்தருக்கு ஒடனே தாவிரும்.
பாத்து நடந்துக்கொ. வீட்டை விட்டு
வெளிய போவாத. உள்ளயே அடஞ்சு கெட.

சரி வே.

ஒங்க அம்மையிட்ட #வெசக்குடுநி போட்டு தரச்சொல்லி
நல்ல குடி. #தடுமம் புடிக்காம பாத்துக்கோ.
தும்மிக்கிட்டே இருக்க ஆளுங்க பக்கமே போவாத.

சரிவே.. நீரு சொல்லுதபடி கேக்கேன்.

- பாளை ப.இசக்கிராஜன்.
படம்- நெல்லையப்பர் கோவில்






No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...