Tuesday, April 28, 2026

• தனித்துப் போட்டியிட தைரியம் இல்லையென்பார்!

 • தனித்துப் போட்டியிட தைரியம் இல்லையென்பார்!

பணிந்து கூட்டணியில் இணைத்துக் கொண்டவர்.! • விவாதங்களில் பங்கேற்கத் தொண்டருக்குத் தடை போட்டார்! விதண்டாவாதங்களில் சிக்கி நொந்தவர்.! • இது வடகொரியா அல்ல! என்பார். பேச்சுச் சுதந்திரத்தை அனுபவிப்பவர்.! • பாரெல்லாம் அடகு போனது என குற்றம் சாட்டுவார்! ஊரெல்லாம் டாஸ்மார்க்கில் மூழ்கவிட்டவர்! • அழுவது யாவும் தனிச்சின்னம் வேண்டியே! முழுவதும் நனைந்தும் முக்காடு போன்றதே! தனித்துப் போட்டியிட யாருக்கும் தைரியம் இல்லை. ஒருவருக்கொருவர் பணிந்து ஆதாயங்களுக்காகக் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார்கள். தங்கள் தொண்டர்கள் யாரும் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்று தடை போட்டவர்கள் எல்லாம் பல்வேறு விவாதங்களில் சிக்கித்திணறி நொந்தும் போனார்கள். யாராவது எதிர்வினை செய்தால் இது வடகொரியா அல்ல என்று எச்சரித்து விட்டு தான் மட்டும் பேசுகிற உரிமையைத் தக்க வைத்துக் கொள்வார்கள். இதன் உட்கிடை மற்றவர்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பது தான். பாரெல்லாம் அடகு போனது என குற்றம் சாட்டுவார்கள். இவர்கள்தான் ஊரையே டாஸ்மாக்கில் மூழ்கவிட்டவர்கள். தனிச்சின்னம் கேட்டே மூலையில் உட்கார்ந்து அழுவார்கள். இவர்கள்தான் முழுதாய் நனைந்த பிறகும் முக்காடு போடுபவர்கள்.



No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...