அமெரிக்க அதிபர் #ட்ரம்பின்அதிரடிவரிவிதிப்புக் கொள்கையை ரத்து செய்ய வைத்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பிற்குப் பின்னால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் தெரியாத ஒரு செய்தி! அவர் அமெரிக்காவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் நீல் கத்யால்!!
தேசங்களுக்கு இடையே பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சிறு வணிகர்கள் மற்றும் லிபர்டி ஜஸ்டிஸ் சென்டர் சார்பாக வாதாடிய இந்திய வம்சா வழியான நீல் கத்யால் அமெரிக்காவில் சிகாகோ வில் பிறந்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்தில் கடந்த 2010 இல் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார்.! அமெரிக்க நீதித்துறையின் உயரிய சிவிலியன் விருதான எட்மண்ட் ராண்டால்ப் விருதிணை பெற்ற சிறப்புக்குரியவர் இவர்! அதுமட்டுமல்லாமல் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலில் மிகச்சிறந்த வழக்கறிஞராக இடம் பிடித்துள்ளார். இந்தியராக இருப்பதற்குப் பெருமை கொள்வோம்.
No comments:
Post a Comment