#ராஜ்யசபாதேர்தல் என்றால் எனக்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்கள் என்னிடம் இந்த முறை ராஜ்ய சபா சீட்டு உங்களுக்கு தான் என்று உறுதி எல்லாம் கூறிவிட்டு ஏமாற்றிய கதை எல்லாம் உண்டு. கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதியில் 2002 முதல் என் vote extract அதற்கான படிவங்களையும் தயார் செய்து ராஜ்யசபா எம்பி கான தேர்வில் என்னை பரிந்துரைக்க முயன்ற போதும் சட்டென உதாசீனப்படுத்தி அவர்கள் மனம் போன போக்கில் வேறு பெயர்களை அறிவிப்பார்கள்!
. அதுபோல வைகோவும் அதே முறையில் நினைவுக்கு வருவார். 1998 நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை சீட்டை எனக்கெனத் தீர்மானித்து வாங்கப்பட்டு பிறகு அப்படி வாய்ப்பு தர முடியாது என்பதற்காக அவர் சொன்ன காரணம் ஒரே ஜாதியில் இருக்கும் இரண்டு பேருக்கு அந்த சீட்டைத் தர முடியாது என்று கூட்டணித் தர்மம் சொல்கிறது என்றார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பிறகு வேறு வேறு ஜாதிகளில் இருக்கக்கூடிய இரண்டு நபர்களுக்கு தனது கூட்டணியில் சீட்டு கொடுத்தார். இன்று பார்த்தால் அவரும் அவரது மகனுக்குமாக ஒரே ஜாதியில் இந்த சீட்டுகளை வாங்கிக் கொள்கிறார். இப்படித்தான் வைகோ என்னை ஏமாற்றினார். என்ன சொல்ல இப்படிப்பட்ட மனிதர்கள் நல்ல மனிதர்கள்Tuesday, April 28, 2026
#ராஜ்யசபாதேர்தல் என்றால் எனக்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment