#ராஜ்யசபாதேர்தல் என்றால் எனக்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்கள் என்னிடம் இந்த முறை ராஜ்ய சபா சீட்டு உங்களுக்கு தான் என்று உறுதி எல்லாம் கூறிவிட்டு ஏமாற்றிய கதை எல்லாம் உண்டு. கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதியில் 2002 முதல் என் vote extract அதற்கான படிவங்களையும் தயார் செய்து ராஜ்யசபா எம்பி கான தேர்வில் என்னை பரிந்துரைக்க முயன்ற போதும் சட்டென உதாசீனப்படுத்தி அவர்கள் மனம் போன போக்கில் வேறு பெயர்களை அறிவிப்பார்கள்!
. அதுபோல வைகோவும் அதே முறையில் நினைவுக்கு வருவார். 1998 நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை சீட்டை எனக்கெனத் தீர்மானித்து வாங்கப்பட்டு பிறகு அப்படி வாய்ப்பு தர முடியாது என்பதற்காக அவர் சொன்ன காரணம் ஒரே ஜாதியில் இருக்கும் இரண்டு பேருக்கு அந்த சீட்டைத் தர முடியாது என்று கூட்டணித் தர்மம் சொல்கிறது என்றார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பிறகு வேறு வேறு ஜாதிகளில் இருக்கக்கூடிய இரண்டு நபர்களுக்கு தனது கூட்டணியில் சீட்டு கொடுத்தார். இன்று பார்த்தால் அவரும் அவரது மகனுக்குமாக ஒரே ஜாதியில் இந்த சீட்டுகளை வாங்கிக் கொள்கிறார். இப்படித்தான் வைகோ என்னை ஏமாற்றினார். என்ன சொல்ல இப்படிப்பட்ட மனிதர்கள் நல்ல மனிதர்கள்Tuesday, April 28, 2026
#ராஜ்யசபாதேர்தல் என்றால் எனக்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment