தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் வைத்தியலிங்கம் , தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிமுக ஆட்சியில் இல்லை என்று ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யைச் சொல்லியுள்ளார். சட்டமன்றத்தில் உண்மையைப் பேச வேண்டிய அமைச்சர் இவ்வாறு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டதை வைத்தே அவர்மீது உரிமைப் பிரச்சனை கொண்டு வந்திருக்க வேண்டும்.
செய்தித்தாள்களில் இதுவரைத் தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது கொட்டை எழுத்துகளில் வெளிவந்ததே? செய்தித்தாள் படிக்கக்கூட அமைச்சருக்கு முடியவில்லையா? அல்லது படிக்கத் தெரியாதா? அப்படிப்பட்டவர் எப்படி அமைச்சரானார்?
கவிஞர் வைரமுத்து தற்கொலை செய்துகொண்ட காவிரி டெல்டா விவசாயிகள் 11பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி சென்னையில் வழங்கியதாகச் செய்திகள் வந்ததே அதுகூட அமைச்சருக்குத் தெரியாதா?
கடன் தொல்லையாலும், மத்திய, மாநில அரசுகளின் விவசாயிகள் விரோத போக்கினாலும், விவசாயம் பொய்த்துப் போய் இதுவரையில் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டியல் இதோ. ஆளவந்தவர்கள் கண்களுக்கு இது போகுமா என்று தெரியவில்லை.
1.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், வெள்ளப்பனேரி கிராமம் செந்தூர்பாண்டி.
2. திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியம், வரகனூர் ஜெகந்நாதன்.
3. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், புதுக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்த பாண்டி.
4. நாகைமாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மாப்படுகை கிராமத்தைச் சார்ந்த முருகைய்யன்.
5.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம், மகிழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்.
6.அரியலூர் மாவட்டம், டி.பழூர் வட்டம் நடுவேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்மோகன்.
7. நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் கூரத்தான் குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம்.
8. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்.
9.புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி ஒன்றியம், காக்காத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி.
10. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், நரிமணம் கிராமத்தைச் சேர்ந்த சாமியப்பன்.
11. நாகைமாவட்டம், வேதாரண்யம் வட்டம், பிராந்தியான்கரை கிராமத்தைச் சேர்ந்த இடும்பையன்.
12. கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளை கிராமத்தைச் சேர்ந்த மரிய மிக்கேல் ராபின்சன்.
13. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் , பிள்ளையார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாத சாமி.
14. புதுக்கோட்டைமாவட்டம், ஆவுடையார் வட்டம், நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்.
15. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன்.
16. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கிலுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்.
17. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆண்டாங்கரை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்.
18. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம்,. நா.தா.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்.
19. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம்.
20. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கோபால்.
21. தஞ்சை மாவட்டம் அண்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி எம்.சம்பந்தம். (23-01-2015)
22. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ஆர்.அழகுவேல் (04-05-2015)
23. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், சித்தன், ராஜாராம்.
என இதுவரை, 25க்கும் மேலான விவசாயிகள் இனி வாழ வழியில்லை என்று தற்கொலை செய்துகொண்டார்கள். இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஏடு (டெல்லி பதிப்பு) 22-06-2015 வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 68விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.
இப்படியெல்லாம் உண்மைகள் இருக்கும் பொழுது ஒரு அமைச்சர், தேசியக் கொடியை பயன்படுத்திக் கொண்டு, அரசு இலச்சினையினையும் பயன்படுத்திக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்பு, நாட்டையும், மக்களையும் ஏமாற்றுகின்றவகையில் சட்டமன்றத்திலேயே பொய் சொல்லுகிறார் என்றால் அவர் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்தானா?
#தமிழகவிவசாயிகள்தற்கொலைபட்டியல்
#FarmersSuicideListinTamilNadu #Agriculture
See Also :
http://ksr1956blog.blogspot.in/2015/05/blog-post_19.html
http://ksr1956blog.blogspot.in/2015/05/urid-dhall.html
http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_3.html
http://ksr1956blog.blogspot.in/2015/07/organic-farming.html
http://ksr1956blog.blogspot.in/2015/08/farmer-suicide.html
http://ksr1956blog.blogspot.in/2015/02/formers-suicide.html
http://ksr1956blog.blogspot.in/2015/03/land-acquisition4.html
http://ksr1956blog.blogspot.in/2015/08/old-farmers-almanac.html
http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_39.html
http://ksr1956blog.blogspot.in/2015/03/get-out-from-agriculture-highly.html
http://ksr1956blog.blogspot.in/2015/07/farmer-agriculture-issue-radhakrishna.html
http://ksr1956blog.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html
http://ksr1956blog.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...


No comments:
Post a Comment