Monday, August 31, 2015

செல்போன் கோபுரங்கள் - Cellphone Towers.


அங்கிங்கெனாதபடி, எங்கும் தற்போது கண்ணில் படுகின்றவை எது என்று கேட்டால் அவை செல்பேசி டவர்கள் தான். இதன் மூலம் வெளியாகின்ற மின் காந்த அதிர்வுகள் சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், மக்களின் நல்வாழ்வையும் சீர்குலைக்கிறது என்ற கருத்தைச் சொல்லியுள்ளனர். சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையும் இந்த கதிர்வீச்சு பாதிப்பினால் குறைந்துவிட்டதாகச் சொல்கின்றனர்.

அதைக்குறித்தான இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஏட்டில், கடந்த 24-08-2015 அன்று புள்ளி விபரங்களோடு கூடிய வரைபடம் வெளியாகியுள்ளது. இத்துடன் அந்தப் வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜெர்மனியின் மருத்துவர்கள் புற்றுநோய் பரவுவது செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் அதிகமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். நார்வேயும் இதே கருத்தைச் சொல்லியுள்ளது. பிரிட்டன் ஆய்வாளர்கள் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கின்றனர்.

கேரளா உயர்நீதிமன்றமும், அலகாபாத் உயர்நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் இதைக் குறித்தான வழக்குகளை விசாரித்து நிபுணர்களிடம் பெற்ற அறிக்கையின்படி, செல்பேசி கோபுரங்களால் எந்த அச்சத்திற்குரிய பாதிப்பும் இல்லை என்ற கருத்தை தங்கள் தீர்ப்பில் சொல்லியுள்ளன.

எனவே செல்பேசி கோபுரங்களினால் பாதிப்பு ஏற்படுகின்றதா? இல்லையா என்பது இன்னும் தீர்க்கப்படாத விடயமாகவே உள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬

#CellphoneTowers.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...