Tuesday, August 15, 2017

நதிகள் நீர் இணைப்பு

இன்றைய(15/8/2017)திஇந்து தமிழ் நாளிதழில் தேசிய நதிகள் நீர் இணைப்பு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் எனது வழக்கில்  தீர்ப்பு, அதனைத் தொடர்ந்து பிரதமரிடத்தில் அடியேன் அளித்த கடிதம், அதன் மீதான மத்திய அரசு நடவடிக்கைகளை உறுதி செய்யும் மத்திய அரசின் சாதகமான பதில் கடிதம் குறித்த எனது பேட்டி வெளிவந்துள்ளது. 

1990 பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து மனு அளித்தேன்.
1992 பிரதமர் நரசிம்மராவ் அவர்களை சந்தித்து மனு அளித்தேன் 
1996 பிரதமர் தேவகெளடா அவர்களை சந்தித்து மனு அளித்தேன் 
2012/ 2013 பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திக்க முயற்சி செய்து பின்னர் அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சாராக பொறுப்பில் இருந்த ஹரீஸ் ரவுத் அவர்களை சந்தித்து மனு அளித்தேன். 
2015 நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களை சந்தித்து முறையிட்டேன் 

தற்போதும் பிரதமர் மோடி அவர்களின் அலுவகத்திற்கு மனு அளித்தேன். 

#தேசியநதிநீர்இணைப்பு 
#திஇந்துதமிழ் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-08-2017

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...