Friday, July 5, 2019

#கூந்தங்குளம்பறவைகள்சரணாலயம்



திருநெல்வேலி - நான்குநேரி செல்லும் சாலை அருகே உள்ள கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஏப்ரல் மாதம் தாக்கிய சுழற்காற்றால் பல சங்குவளை நாரை கூடுகள் சரிந்து பல பறவைகளும், பறவை குஞ்சுகளும் இறந்தன. மீதம் மீட்கப்பட்ட பறவை குஞ்சுகள் வன அலுவலகத்தில் உள்ள பறவைகள் மீட்பு மையத்தில் திரு. பால்பாண்டி அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான உணவு, பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் , பறவை நண்பர்கள், ஒரு முறை கூந்தங்குளம் சென்று திரு. பால்பாண்டி அவர்களை சந்தித்து, பறவைகளையும் கண்டு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பறவைகளை காணச் செல்லும் போது கையில் 1Kg மீன்களை வாங்கிச் சென்று பறவை குஞ்சுகளுக்கு அளியுங்கள்.
பால்பாண்டி 9486205438
முடிந்த வரை நேரில் சென்று அவரை பாராட்டி விட்டு , பறவைகளை கண்ட பின் உதவியை செய்யுங்கள்.

No comments:

Post a Comment

06.06.2026

  06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...