Tuesday, July 14, 2026

இந்தி எதிர்ப்பு போராட்டங்களை சுதந்திர போராட்டம் போல திமுக சித்தரித்ததை அன்றே யாரும் ஏற்கவில்லை.

 இந்தி எதிர்ப்பு போராட்டங்களை சுதந்திர போராட்டம் போல திமுக சித்தரித்ததை அன்றே யாரும் ஏற்கவில்லை..கடும் கண்டங்கள் அதற்கு வந்தன.அப்போதும் திமுக அரசு வந்த பிறகு மொழிப்போர் தியாகிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட கட்சிக்காரர்கள் சில சலுகைகளை திமுக அரசு வழங்கியது. ஓய்வூதியம் கூட இருந்தது.

இந்தி எதிர்ப்பு, எமர்ஜென்சி எதிர்ப்பு போன்றவை அரசாங்கம் Vs கட்சி மற்றும் மக்கள் என்றிருந்தது.ஆனால் கரூர் விவகாரம் அப்படியில்லை..அதன் முழு காரணமும் விசாரணையில் உள்ள போது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுப் பணிநியமன ஆணை வழங்குவதெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது? அவர்களுக்கு கட்சி சார்பாக இழப்பீடுகள் தந்திருக்கும் போது, அரசாங்கமே தற்போது பிரயாச்சித்தம் செய்ய நினைப்பது முழுக்க முழுக்க அரசியலே..குறுகிய நோக்கங்களுக்குள் மக்கள் அடைக்கப்படுவது போல உள்ளது.. கரூரில் இதையும் கடந்து கோவில் நிலங்களையும் இலவசமாக பட்டாவாக வழங்கியது தவெக அரசு என்று தகவல்.



No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.