Wednesday, August 22, 2018

*நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்.*



------------------------------------
இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால் அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கேல்கர் குழுவின் தலைவர் விஜய் கேல்கர் அங்கு தான் வசிக்கிறார். இந்த கூட்டத்தில் 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில.

1. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வீடு செய்யவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை மறுதலிக்கும் வகையில் சமகால மக்கள் தொகையின்படி நிதிப்பகிர்வீடு என்று இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பும், கேடும் ஏற்படும்.

2. பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிற்பட்ட மாநிலங்களாகும். அந்த மாநிலங்களுக்கு நிதியை அதிகம் வழங்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கனா,கர்நாடகம் போன்ற தென் மாநிலங்கள் முன்னேறிய மாநிலம் என்றும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றாந்தாய் போக்கான முறையாகும்.

நிதிக் கமிசன் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு அமைப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட திட்டக்குழு கலைக்கப்பட்டு நிடி ஆயோக் என்று மாற்றப்பட்டுள்ளது. அந்த குழுவே சூப்பர் கேபினெட்டாக மாநில அரசின் முதல்வர்களையும் நடத்திய விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட திட்டக்குழுவை எதிர்த்தே நாம் கடந்த காலத்தில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்தோம். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரமற்ற நிடி ஆயோக்கிற்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது. இந்த தான்தோன்றித்தனமான போக்கு சமஷ்டி அமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிக்கும்.

#நிடி_ஆயோக்
#திட்டக்குழு
#Planning_commission
#NITI_Aayog
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...