Sunday, August 26, 2018

ஈழப்பிரச்சனை

இதே நாளில்,26/08/1983ல்....
————————————————
ஈழப்பிரச்சனை 1983இல் உக்கிரமாக இருந்தபோது, 07/08/1983இல் பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இலங்கைக்கு தியாகப் பயணம் செல்வதற்காக மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை நடந்து அங்கிருந்து படகுகள் மூலமாக ஈழத்துக்கு செல்வதாக இருந்த போராட்டம் தமிழக காவல்துறையால் தடுக்கப்பட்டது. 

அந்த நிகழ்வுகளுக்குப் பின், இதே நாளில் (26/08/1983)நான் ஏற்பாடு செய்து பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த ஈழப்பிரச்சனை ஆலோசனைக் கூட்டம் சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலின் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் அன்றைக்கிருந்த கொடூர நிலையிலும் சிங்களவர்களிடமிருந்து தப்பி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஈழவேந்தன்,கரிகாலன் போன்ற ஈழத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பா.மாணிக்கம், அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, இரா. செழியன், அதிமுக, மேலவைத் துணைத் தலைவராக இருந்த புலமைப்பித்தன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

#ஈழப்பிரச்சனை
#பொது_வாழ்க்கை
#Public_life
#Tamil_Eelam
#pa_nedumaran
#பழ_நெடுமாறன்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-08-2018


No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...